- விவசாயியை மிரட்டிய இருவர் அதிரடி கைது
பாலக்கோடு: மாரண்டஹள்ளி அருகே விவசாயிடம் நிலத்தை விலைக்கு கேட்டு மிரட்டிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மாரண்டஹள்ளி அடுத்த கரகூரை சேர்ந்தவர் விவசாயி கேசவன் (43). அதே ஊரை சேர்ந்தவர்கள் சாமிநாதன் (50), செல்வம் (24). இவர்கள் இருவரும் கேசவனுக்கு சொந்தமான நிலத்தை தங்களுக்கு விற்குமாறு கேட்டு தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் இவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. கேசவனிடம் நிலத்தை கேட்டு சாமிநாதன் மற்றும் செல்வம் ஆகியோர் சேர்ந்து மிரட்டியுள்ளனர். இது குறித்து கேசவன் மாரண்டஹள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து சாமிநாதன், செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.
Marandahalli Map
Friday, March 12, 2010
விவசாயியை மிரட்டிய இருவர் அதிரடி கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment