சப் - ரிஜிஸ்டர் ஆஃபீஸுக்கு புதிய கட்டிடம்: எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012,03:01 IST
மாரண்டஅள்ளி :
"காரிமங்கலம் மற்றும் மாரண்டஅள்ளி சப் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும்,'' என எம்.எல்.ஏ., அன்பழகன் சட்டசபையில் பேசினார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் சட்டசபையில் பேசியதாவது:
பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து மற்றும் மாரண்டஅள்ளி டவன் பஞ்சாயத்தில் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு இடங்களில் அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இரண்டு அலுவலத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. புதிய கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம் கூறியதாவது: எம்.எல்.ஏ., அன்பழகன் கூறியதை போல ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் பழமையான சப் ரிஜிஸ்டர் அலுவலகத்துக்கு, போதுமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். அந்த இடம் தேர்வு செய்யப்பட்டு துறைக்கு ஒப்படைக்க பட்டிருக்கமானால் முன்னுரிமை அடிப்படையில் தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புதிய கட்டிடம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.