தர்மபுரி மாவட்டத்தில், சமீபத்தில் பெய்த மழையை தொடர்ந்து அணைகளில் நீர் மட்டம் உயர்வடைந்தது. இதையடுத்து, வாணியாறு மற்றும் பஞ்சப்பள்ளி அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில், சமீபத்தில் பெய்த மழையை தொடர்ந்து, அணைகளில் நீர் மட்டம் உயர்வடைந்தது. இதை தொடர்ந்து, விவசாயிகள், அணைகளில் இருந்து பாசனத்துக்கு நீர் திறந்துவிட வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கை ஏற்ற அரசு, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, வாணியாறு அணை மற்றும் பாலக்கோடு தாலுகா பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. இவ்விரு அணைகளில் இருந்து, தண்ணீரை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், நேற்று முன்தினம் திறந்து வைத்தார். வாணியாறு அணையில் இருந்து இடது புற கால்வாய் வழியாக விநாடிக்கு, 45 கன அடி வீதமும், வலது புறக்கால்வாய் வழியாக விநாடிக்கு, 50 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு இடது மற்றும் வலது புறக்கால்வாய்களில், ஒவ்வொரு கால்வாயிலும் இரு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஐந்து நாட்கள் வீதம், பத்து நாட்களுக்கு ஒரு நனைப்பு வீதம் மூன்று நனைப்பு (ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு நனைப்பு இடைவெளி 10 நாட்கள்) சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கவும், பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு அனைத்து ஐந்து ஏரிகளுக்கும் ஒரு முறை தண்ணீர் நிரப்பி தரவும் நேற்று முன்தினம் முதல், 45 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம், மோளையானூர், கோழிமேக்கானூர், பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, அலமேலுபுரம், தாதம்பட்டி, ஆலாபுரம், மருக்காலம்பட்டி, ஓந்தியாம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, வெங்கடசமுத்திரம், தேவராஜபாளையம், மெணசி, பூதநத்தம், தென்கரைக்கோட்டை, ஜம்மனஹள்ளி, பறையப்பட்டி, புதூர், நாச்சினம்பட்டி மற்றும் சின்னாங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள, 10 ஆயிரத்து 517 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். * பஞ்சப்பள்ளி சின்னாறு அணை: பாலக்கோடு தாலுகா, பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு நான்கு ஏரிகளுக்கு ஆற்றின் வழியாக நேற்று முன்தினம் முதல் ஒருமுறை நிரப்பவும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு விநாடிக்கு, 35 கன அடி வீதம், 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்தும், 13 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், ஐந்து முறை முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஹள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த, 3,198 ஏக்கர் பாசன வசதி பெறும். அணை நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பாசன வசதி பெறும் கிராமங்களில், விவசாய பணிகளின் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அணை நீர் திறப்பு நிகழ்ச்சியில், கலெக்டர் லில்லி, பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் டி.ஆர்.அன்பழகன், யூனியன் சேர்மன்கள் முருகன், முனுசாமி, கருணாகரன், துணை தலைவர்கள் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சுமதி, மாவட்ட கவுன்சிலர் குமுதா, சங்கர், மம்தா, ஆதி வெங்கடாசலம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெகநாதன், உதவி பொறியாளர்கள் விஜயகுமார், சீதாபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் சந்திரன், வேலு, பஞ்சாயத்து தலைவர்கள் வஜ்ஜிரவேலு, வெங்கடாசலம், கிருஷ்ணமூர்த்தி, நித்யா உட்பட பலர் உடன் இருந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், சமீபத்தில் பெய்த மழையை தொடர்ந்து, அணைகளில் நீர் மட்டம் உயர்வடைந்தது. இதை தொடர்ந்து, விவசாயிகள், அணைகளில் இருந்து பாசனத்துக்கு நீர் திறந்துவிட வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கை ஏற்ற அரசு, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, வாணியாறு அணை மற்றும் பாலக்கோடு தாலுகா பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. இவ்விரு அணைகளில் இருந்து, தண்ணீரை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், நேற்று முன்தினம் திறந்து வைத்தார். வாணியாறு அணையில் இருந்து இடது புற கால்வாய் வழியாக விநாடிக்கு, 45 கன அடி வீதமும், வலது புறக்கால்வாய் வழியாக விநாடிக்கு, 50 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு இடது மற்றும் வலது புறக்கால்வாய்களில், ஒவ்வொரு கால்வாயிலும் இரு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஐந்து நாட்கள் வீதம், பத்து நாட்களுக்கு ஒரு நனைப்பு வீதம் மூன்று நனைப்பு (ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு நனைப்பு இடைவெளி 10 நாட்கள்) சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கவும், பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு அனைத்து ஐந்து ஏரிகளுக்கும் ஒரு முறை தண்ணீர் நிரப்பி தரவும் நேற்று முன்தினம் முதல், 45 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம், மோளையானூர், கோழிமேக்கானூர், பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, அலமேலுபுரம், தாதம்பட்டி, ஆலாபுரம், மருக்காலம்பட்டி, ஓந்தியாம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, வெங்கடசமுத்திரம், தேவராஜபாளையம், மெணசி, பூதநத்தம், தென்கரைக்கோட்டை, ஜம்மனஹள்ளி, பறையப்பட்டி, புதூர், நாச்சினம்பட்டி மற்றும் சின்னாங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள, 10 ஆயிரத்து 517 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். * பஞ்சப்பள்ளி சின்னாறு அணை: பாலக்கோடு தாலுகா, பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு நான்கு ஏரிகளுக்கு ஆற்றின் வழியாக நேற்று முன்தினம் முதல் ஒருமுறை நிரப்பவும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு விநாடிக்கு, 35 கன அடி வீதம், 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்தும், 13 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், ஐந்து முறை முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஹள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த, 3,198 ஏக்கர் பாசன வசதி பெறும். அணை நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பாசன வசதி பெறும் கிராமங்களில், விவசாய பணிகளின் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அணை நீர் திறப்பு நிகழ்ச்சியில், கலெக்டர் லில்லி, பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் டி.ஆர்.அன்பழகன், யூனியன் சேர்மன்கள் முருகன், முனுசாமி, கருணாகரன், துணை தலைவர்கள் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சுமதி, மாவட்ட கவுன்சிலர் குமுதா, சங்கர், மம்தா, ஆதி வெங்கடாசலம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெகநாதன், உதவி பொறியாளர்கள் விஜயகுமார், சீதாபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் சந்திரன், வேலு, பஞ்சாயத்து தலைவர்கள் வஜ்ஜிரவேலு, வெங்கடாசலம், கிருஷ்ணமூர்த்தி, நித்யா உட்பட பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment