Marandahalli Map

Sunday, December 25, 2011

பெண்களை தாக்கிய இரு வாலிபர் கைது

பெண்களை தாக்கிய இரு வாலிபர் கைது
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011,01:49 IST

பாலக்கோடு: பஞ்சப்பள்ளி அருகே, பெண்களை தாக்கிய, இரு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.பஞ்சப்பள்ளி அடுத்த ஜலதிம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதேவி (29). இவரது உறவினர்கள் பாரதி (15), சின்னப்பன் (12). இவர்களை அதே பகுதியை சேர்ந்த காளேகவுண்டர் (27), சதீஷ் (27) ஆகியோர் திட்டி ரகளை செய்தனர்.இதை கங்காதேவி தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த காளேகவுண்டர் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து கங்காதேவிதை அடித்து உதைத்தனர். இதை தடுக்க சென்ற கங்காதேவியின் அத்தை கதிரியம்மாளையும் தாக்கினர். காயமடைந்த இருவரும் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாரண்டஹள்ளி போலீஸார் விசாரித்து, காளேகவுண்டர், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

No comments: