பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2012,02:07 IST
பாலக்கோடு: மாரண்டஹள்ளியில் வாலிபர் தூக்கில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது என உறவினர்கள் கூறிய புகாரை தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
மாரண்டஹள்ளி கரகூரை சேர்ந்தவர் விவசாயி முருகன். இவரது மகன் சத்தியமூர்த்தி (23). இவர் டி.எம்.இ., படித்து விட்டு தந்தையுடன் சேர்ந்த விவசாய பணிகளை கவனித்து வந்தார். இவருக்கும் கோட்டூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணின் பெற்றோருக்கு காதல் விவரம் தெரிந்து, கடந்த இரு நாட்களுக்கு முன் சத்தியமூர்த்தியை பெண்ணின் உறவினர்கள் வந்து கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்ற சத்தியமூர்த்தி வீடு திரும்பவில்லை.
சந்தேகம் அடைந்த சத்தியமூர்த்தியின் உறவினர்கள் அவரை தேடிய போது, அந்த பகுதியில் உள்ள மாந்÷õப்பில் சத்தியமூர்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். காதல் தகராறில் சத்தியமூர்த்தியை கொலை செய்து இருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர்.
சத்தியமூர்த்தியின் தந்தை முருகன் மாரண்டஹள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் மர்ம சாவு குறித்து விசாரிக்கின்றனர்.
மாரண்டஹள்ளி கரகூரை சேர்ந்தவர் விவசாயி முருகன். இவரது மகன் சத்தியமூர்த்தி (23). இவர் டி.எம்.இ., படித்து விட்டு தந்தையுடன் சேர்ந்த விவசாய பணிகளை கவனித்து வந்தார். இவருக்கும் கோட்டூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணின் பெற்றோருக்கு காதல் விவரம் தெரிந்து, கடந்த இரு நாட்களுக்கு முன் சத்தியமூர்த்தியை பெண்ணின் உறவினர்கள் வந்து கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்ற சத்தியமூர்த்தி வீடு திரும்பவில்லை.
சந்தேகம் அடைந்த சத்தியமூர்த்தியின் உறவினர்கள் அவரை தேடிய போது, அந்த பகுதியில் உள்ள மாந்÷õப்பில் சத்தியமூர்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். காதல் தகராறில் சத்தியமூர்த்தியை கொலை செய்து இருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர்.
சத்தியமூர்த்தியின் தந்தை முருகன் மாரண்டஹள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் மர்ம சாவு குறித்து விசாரிக்கின்றனர்.