பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012,01:52 IST
பாலக்கோடு: மாரண்டஹள்ளி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.மாரண்டஹள்ளி அருகே ஏரியில் அனுமதியின்றி மணல் வெட்டி கடத்துவதாக ஆர்.ஐ., கோவிந்தராஜிக்கு தகவல் வந்தது. ஆர்.ஐ., கோவிந்தராஜ் தலைமையில் உதவியாளர் முருகன் ஆகியோர் சிக்கமாரண்டஅள்ளி புதூரில் உள்ள செங்கன் பசுவன்தலாவ் ஏரிக்கு சென்றனர்.அங்கு டிராக்டரில் மணல் அள்ளியவர்கள் இவர்களை கண்டதும் தப்பியோடினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மாதுசாமி (30) என்பவருக்கு சொந்தமான டிராக்டர் என தெரியவந்தது. மாதுசாமி மீது வழக்குபதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தாசில்தார் மணி விசாரிக்கிறார்.
No comments:
Post a Comment