Marandahalli Map

Thursday, July 22, 2010

வரி உயர்வைக் கண்டித்து கடையடைப்பு

தருமபுரி, ஜூலை 10:  
வரி உயர்வைக் கண்டித்து மாரண்டஅள்ளியில் வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு மற்றும் முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் கடந்த 2008 ஜூன் 30-ம் தேதி முதல் சொத்துவரி 15%, தொழில் வரி 100%, கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தப்பட்டது.

இதைக் கண்டித்து வணிகர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் கடந்த 2009 ஜூன் 3-ம் தேதி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி வரி குறைப்புக்கான ஒப்பந்தம் போடப்பட்டு உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) பரிந்துரைக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் வரி உயர்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வளர்ச்சித் திட்டப் பணிகள்

தருமபுரி, செப்.4: 
பாலக்கோடு ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட
ஆட்சியர் பெ.அமுதா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பி.செட்டிஅள்ளி, கொலசனஅள்ளி பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட நூலகம், மாரண்டஅள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பேரூராட்சி கடைகள், ரூ.327 லட்சம் மதிப்பில் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளியில் சின்னாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலங்கள், ரூ.5 லட்சம் மதிப்பில் அகரம் பகுதியில் கட்டப்படுவரும் குளம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

 தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.5 லட்சம் மதிப்பில் குமாரசெட்டி முதல் அகரம் வரை செயல்படுத்தப்படும் ஏரி வாய்க்கால் தூர் வாரும் பணி, பஞ்சப்பள்ளி அடுத்த ஒட்டத்திண்ணை பகுதியில் ரூ.15.5 லட்சம் மதிப்பில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரி, மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் ராஜகுமாரி மணிவண்ணன், செயல் அலுவலர் மாணிக்கவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


இலவச கலர் "டிவி' கோரி சாலை மறியல்

பாலக்கோடு: 
பாலக்கோடு அருகே இலவச கலர் "டிவி' கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலக்கோடு அடுத்த கும்மனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது நம்மாண்டஅள்ளி கிராமம். இந்த பகுதியில் அரசு இலவச கலர் "டிவி' வழங்கிய போது சிலருக்கு விடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை அரசு இலவச கலர் "டிவி' கேட்டு சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாலக்கோடு தாசில்தார் மணி, மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தனர்.

ர‌யில் - வேன் மோதல்

ர‌யில் - வேன் மோதல்

சேலம் ச‌ந்‌தி‌ப்‌பி‌ல் இருந்து பெங்களூருக்கு சென்ற பய‌ணிக‌ள் ரயில் மாரண்டஅள்ளி - பாலக்கோடு இடையே வட்டகனம்பட்டி என்ற இடத்தில் ஆள் இல்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது டெம்போ வேன் மீது மோதியது.

இதில் வேனின் முன் பகுதி பல‌த்த சேதம் அடைந்தது. ரயிலின் படிக்கெட்டில் அமர்ந்து பயணம் செய்த 3 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

ஆள் இல்லாத ரயில்வே கேட்டில் ர‌யி‌ல் மெதுவாக சென்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.