Marandahalli Map

Thursday, July 22, 2010

இலவச கலர் "டிவி' கோரி சாலை மறியல்

பாலக்கோடு: 
பாலக்கோடு அருகே இலவச கலர் "டிவி' கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலக்கோடு அடுத்த கும்மனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது நம்மாண்டஅள்ளி கிராமம். இந்த பகுதியில் அரசு இலவச கலர் "டிவி' வழங்கிய போது சிலருக்கு விடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை அரசு இலவச கலர் "டிவி' கேட்டு சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாலக்கோடு தாசில்தார் மணி, மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தனர்.

No comments: