பொங்கலால் களை கட்டியது மாரண்டஹள்ளி வாரச்சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனை
பதிவு செய்த நேரம்:2014-01-13 10:11:54
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டு சந்தை கூடுகிறது.
மாரண்டஹள்ளி : பொங்கலையொட்டி மாரண்டஹள்ளியில் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை
நேற்று களை கட்டியது.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டு சந்தை கூடுகிறது.
இந்த சந்தைக்கு மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 3ஆ யிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. பொங்கல் பண்டிகை காரணமாக கடந்த வாரத்தைவிட ஆடுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
நேற்று, 12 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட செம்மறி ஆடுகள் ரூ6 ஆயிரம் முதல் ரூ7ஆயிரம் வரையும், வெள்ளாடுகள் ரூ7 முதல் ரூ.9 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.
நேற்று, 12 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட செம்மறி ஆடுகள் ரூ6 ஆயிரம் முதல் ரூ7ஆயிரம் வரையும், வெள்ளாடுகள் ரூ7 முதல் ரூ.9 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.
இதே போல் பொங்கலுக்கு தேவையான கரும்பு, வெல்லம், மண்பானை, காய்கறிகள் விற்பனையும் அமோகமாக நடந்தது.
சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் அதிக அளவில் சந்தைக்கு வந்து பொருட்கள்
வாங்கிச்சென்றனர்.
சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் அதிக அளவில் சந்தைக்கு வந்து பொருட்கள்
வாங்கிச்சென்றனர்.
No comments:
Post a Comment