மாரண்டஹள்ளி அருகே தொழிலாளி தற்கொலை
2013
04:14
பதிவு செய்த நாள்
11ஜூன்2013
04:14
பாலக்கோடு: கிட்னி செயல் இழந்த விரக்தியில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மாரண்டஹள்ளியை அடுத்து ஆத்துக்கொட்டாயை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து, 60. கடந்த சில தினங்களுக்கு முன் முத்துவின் உடலில் உள்ள, இரு கிட்னிகளும் செயல் இழந்தன. இதனால், அவதிப்பட்டு வந்த முத்து கடந்த, இரு தினங்களுக்கு முன் விஷம் குடித்தார்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்து நேற்று முன்தினம் இரவு இறந்தார். மாரண்டஹள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
* தர்மபுரியை அடுத்த வெள்ளோலையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கவேல், 45. இவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. விரக்தி அடைந்த தங்கவேல், கடந்த, 7ம் தேதி அவரது வீட்டின் அருகே விஷம் குடித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மாரண்டஹள்ளியை அடுத்து ஆத்துக்கொட்டாயை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து, 60. கடந்த சில தினங்களுக்கு முன் முத்துவின் உடலில் உள்ள, இரு கிட்னிகளும் செயல் இழந்தன. இதனால், அவதிப்பட்டு வந்த முத்து கடந்த, இரு தினங்களுக்கு முன் விஷம் குடித்தார்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்து நேற்று முன்தினம் இரவு இறந்தார். மாரண்டஹள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
* தர்மபுரியை அடுத்த வெள்ளோலையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கவேல், 45. இவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. விரக்தி அடைந்த தங்கவேல், கடந்த, 7ம் தேதி அவரது வீட்டின் அருகே விஷம் குடித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment