Marandahalli Map

Saturday, June 28, 2014

மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்தில் வக்கீலை தாக்கிய எஸ்.ஐ. “சஸ்பெண்டு”

மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்தில் வக்கீலை தாக்கிய எஸ்.ஐ. “சஸ்பெண்டு”
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜூலை 05, 5:00 PM IST
தர்மபுரி, ஜூலை. 5-
மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்தில் 
 வக்கீலை தாக்கிய எஸ்.ஐ. “சஸ்பெண்டு”
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை 
சேர்ந்தவர் வக்கீல் ரவிசங்கர். சம்பவத்தன்று இவரது வீட்டில் திருடு போனது.
இதையடுத்து புகார் கொடுக்க மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். 
அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் புகாரை வாங்காமால் காலதாமதம் செய்துள்ளார். இதில் எஸ்.ஐ. கணேசன், வக்கீல் ரவிசங்கரை தாக்கியதாக புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக தர்மபுரியில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கணேசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

No comments: