Marandahalli Map

Friday, July 1, 2011

மாரண்டஹள்ளியில் பூட்டிய வீட்டில் திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

தர்மபுரி: மாரண்டஹள்ளியில் பூட்டிய வீட்டில் திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

மாரண்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் திருமால் (42). இவர் கடந்த 23ம் தேதி குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். மறு நாள் காலை வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த திருமால் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 22,500 ரூபாய் ரொக்க பணம், 2 பவுன் நகை உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. மாரண்டஅள்ளி போலீஸார் விசாரித்தனர்.

நேற்று காலை மாரண்டஹள்ளி நான்கு ரோடு பகுதியில் சுற்றிய வாலிபரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர் முன்னுக்க பின் முரணான தகவல்களை கூறினார். சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் மாரண்டஹள்ளி மின்வாரிய குடியிருப்பை சேர்ந்த சக்திவேல் (25) என்பதும், பல திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. மேலும் திருமால் வீட்டில் திருடியதையும், சக்திவேல் ஒப்புக்கொண்டார். அவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தர்மபுரி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை

தர்மபுரி: தர்மபுரி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதில், மூதாட்டி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். தர்மபுரியை அடுத்த மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் முருகேசன்(38). இவர் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி ரத்தினம்மாள்(38). இவர்களுக்கு மகள்கள் தங்கமணி(16), மேகலா(14), மகன் லோகேஷ்பாபு(4) ஆகியோர் உள்ளனர்.


இவர்களுடைய பாட்டி லோகம்மாள்(50). தங்கமணி பத்தாம் வகுப்பு தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெறுவார் என குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 250 மதிப்பெண் மட்டும் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதனால், அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். தங்கமணியை பெற்றோர் திட்டியுள்ளார். நேற்று முருகேசன் வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்றார். அவர் சென்றதும், தங்கமணியை மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறி அவரது தாய் ரத்தினம்மாள் திட்டினார்.


இதனால், அவர் வீட்டில் இருந்த விஷ பாட்டிலை எடுத்து குடித்து விட்டார். இதை சற்றும் எதிர்பாராத ரத்தினம்மா தானும் விஷத்தை எடுத்து குடித்து விட்டு குழந்தைகள் மேகலா, லோகேஷ்பாபு, பாட்டி லாகம்மாள் ஆகியோருக்கு விஷத்தை கொடுத்தார். விஷம் குடித்த அனைவரும் மயங்கி கிடந்தனர்.


உறவினர்கள் ஐந்து பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில், பாட்டி லோகம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். மற்ற நான்கு பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாரண்டஅள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் நடந்து வரும் மெகா மாட்டுச்சந்தை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் நடந்து வரும் மெகா மாட்டுச்சந்தையில், ஒரு ஜோடி காளை மாடுகள் 10 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணியர் சுவாமி தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி, ஆண்டுதோறும் ஒரு வாரம் மெகா மாட்டுச்சந்தை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் 30ம் தேதி மாட்டு சந்தை துவங்கியது.



கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணா மலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.ஆந்திர மாநிலம் குப்பம், கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப்., ஆகிய பகுதியில் இருந்து விற்பனைக்கு அதிக அளவில் மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.மாடு வாங்குவதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, காளை மாடுகள், பசு மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. எனினும் வியாபாரிகள் வருகை குறைந்து காணப்படுகிறது.

மாரண்டஅள்ளி அருகே நர்சிங் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்

தர்மபுரி: மாரண்டஅள்ளி அருகே நர்சிங் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். மாரண்டஹள்ளி அடுத்த செம்மனஹள்ளியை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் மகள் ரம்யா (20). மாரண்டஹள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் இருந்த சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்புகொண்டபோது மாணவி கல்லூரிக்கு வரவில்லையென கூறினர். இதனால், மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது உறவினர்கள் மாணவி மாயமானது குறித்து மாரண்டஹள்ளி போலீஸில் நேற்று புகார் செய்தனர். மர்ம நபர்கள் சிலர் கல்லூரி செல்லும்போது தன்னை ஈவ் டீசிங் செய்வதாக சில நாட்களுக்கு முன் பெற்றோர்களிடம் தெரிவித்திருந்தார். தற்போது மாணவி மாயமானதால், மாணவியை யாராவது கடத்திசென்று இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்து விசாரித்து வருகின்றனர்.

மாரண்டஅள்ளி கால்நடை மருத்தகத்தில் மூன்று நாட்கள் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

தர்மபுரி: நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறை சார்பில்
மாரண்டஅள்ளி கால்நடை மருத்தகத்தில் மூன்று நாட்கள் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம் முகாமை துவக்கி வைத்து பேசினார். மாரண்டஹள்ளி அணைக்கட்டு ஆயக்கட்டு விவசாயிகள் சங்க தலைவர் சேட்டு பயிற்சி முகாம் கையேட்டினை வெளியிட்டார். அ.மல்லாபுரம் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் கணேஷ்பாபு, மகேந்திரமங்கலம் மருந்தக உதவி மருத்துவர் கோகிலவாணி ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை மாரண்டஹள்ளி கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் சரவணன் செய்திருந்தார்.

அரசு பள்ளி வகுப்பறை கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாலக்கோடு அருகே அரசு பள்ளி வகுப்பறை கதவை உடைத்து ஒரு லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ் மிஷின்களை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மாரண்ட அள்ளி அடுத்த‌ பெல்லுஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியையாக சாலம்மாள் (50) உள்ளார். பி.டி.ஏ., தலைவராக நாகராஜ் (40) உள்ளார். நேற்று முன் தினம் மாலை வழக்கம் போல் தலைமையாசிரியை சாலம்மாள் பள்ளியை பூட்டிச்சென்றார்.

மாரண்டஅள்ளி அடுத்த‌

நேற்று காலை நாகராஜ் பள்ளி பக்கம் சென்றார். அப்போது கம்ப்யூட்டர் இருந்த அறையில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தலைமையாசிரியைக்கு தகவல் தெரிவித்தார். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

அறையிலிருந்து ஒரு கம்ப்யூட்டர், ஐந்து லேப் டாப்கள், ஒரு ஜெராக்ஸ் மிஷின் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ஒரு லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாகும். மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ராஜேந்திரன், எஸ்.ஐ., கிருஷ்ணன் ஆகியோர் விசாரித்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.