தர்மபுரி அருகே பரபரப்பு:
தண்டவாளத்தில் சேதம்:
பயணிகள் ரெயில் தப்பியது;
நாசவேலையா? விசாரணை
Dharmapuri
சனிக்கிழமை,
ஆகஸ்ட் 20,
5:38 PM IST


தர்மபுரி, ஆக. 20-
சேலம்-யஷ்வந்த்பூர்
ரெயில் மார்க்கத்தில் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே
தண்டவாளத்தையொட்டி பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த
பகுதியில் வரும் அனைத்து ரெயில்களும் மெதுவாக சென்று வந்தது. இதே போல்
நேற்று மாலையும் யஷ்வந்த்பூர்-சேலம் பயணிகள் ரெயில் மாரண்ட அள்ளி ரெயில்
நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு இடத்தில் தண்டவாளம்
வளைந்து இருப்பது தெரியவந்தது.
இதைப்பார்த்த ரெயில்
என்ஜின் டிரைவர் திடீர் பிரேக் போட்டு நிறுத்தினார். பின்னர் இதுகுறித்து
ரெயில்வே அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து
அந்த பக்கமாக வந்த அனைத்து ரெயில்களும் வேறு வழியாக திருப்பி விடப்பட்டது.
பின்னர் அதிகாரிகள் வந்து பார்த்த போது தண்டவாளம் அடியில் பெயர்க்க
முயன்றது போல வளைந்து காணப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து
அவை சரிசெய்யப்பட்டு 30 நிமிடத்துக்கு பின்னர் மெதுவாக அந்த பகுதியில்
ரெயில் இயக்கப்பட்டது. சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய
விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயிலை கவிழக்க யாராவது சதி செய்தார்களா? என்று
விசாரணை நடத்தப்பட்டது. மேலும் என்ஜின் டிரைவர் ரெயில் தாமதத்துக்கான
காரணத்தை அதிகாரிகளிடம் எழுதி வாங்கி சென்றார். இதனால் 9-30 மணிக்கு சேலம்
ரெயில் நிலையத்துக்கு வரவேண்டிய யஷ்வந்த்பூர் பயணிகள் ரெயில் தாமதமாக வந்து
சேர்ந்தது.
விசாரணையில் தண்டவாளத்தையொட்டி பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் பொக்லின் மோதி தண்டவாளம் வளைந்து இருப்பது தெரியவந்தது.
No comments:
Post a Comment