Marandahalli Map

Wednesday, September 7, 2011

வர்த்தக நிறுவனம், கூட்டுறவு வங்கிகளில் திருடிய இரு வாலிபர்கள் அதிரடி கைது

வர்த்தக நிறுவனம், கூட்டுறவு வங்கிகளில் திருடிய இரு வாலிபர்கள் அதிரடி கைது
 
பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011,23:12 IST

  
பாலக்கோடு: பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள், நகர கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல இடங்களில் திருடிய இரு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். திம்மம்பட்டியை சேர்ந்த சங்கர் என்பவர் நேற்று முன்தினம் பாலக்கோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி 160 ரூபாயை பறித்து சென்றார். இது குறித்து பாலக்கோடு போலீஸில் சங்கர் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கர் கூறிய அடையாளத்தை வைத்து ஒரு வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் பாலக்கோடு சாணார் தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் (23) என்பது தெரிந்தது. சிறு வயதில் தாயாரை இழந்த கார்த்திக்கு, தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

கடந்த 2008ம் ஆண்டு ஒரு ஜவுளிக்கடையில் திருடிய கார்த்திக்கை போலீஸார் கைது செய்தனர். மூன்றாண்டு சிறையில் இருந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார். பின்னர் கார்த்திக்கும், அவரது நண்பர் ஆறுமுகம் என்பவரும் சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 20ம் தேதி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வணிக வளாகத்தில் நள்ளிரவில் புகுந்த இவர்கள் அங்குள்ள ரத்த பரிசோதனை நிலையம், இரு நிதி நிறுனவனங்களில் கதவுகளை உடைத்து 61,300 ரூபாயை திருடியுள்ளனர். கடந்த ஏப்ரல் 17ம் தேதி பாலக்கோடு நகர கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 39,828 ரூபாய் திருடியுள்ளனர். இதே போல் பல இடங்களில் அவர்கள் திருடியது தெரிந்தது. கார்த்திக் கொடுத்த தகவல் அடிப்படையில் பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரிந்த ஆறுமுகத்தையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 29,160 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

No comments: