வர்த்தக நிறுவனம், கூட்டுறவு வங்கிகளில் திருடிய இரு வாலிபர்கள் அதிரடி கைது
பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011,23:12 IST
கடந்த 2008ம் ஆண்டு ஒரு ஜவுளிக்கடையில் திருடிய கார்த்திக்கை போலீஸார் கைது செய்தனர். மூன்றாண்டு சிறையில் இருந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார். பின்னர் கார்த்திக்கும், அவரது நண்பர் ஆறுமுகம் என்பவரும் சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 20ம் தேதி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வணிக வளாகத்தில் நள்ளிரவில் புகுந்த இவர்கள் அங்குள்ள ரத்த பரிசோதனை நிலையம், இரு நிதி நிறுனவனங்களில் கதவுகளை உடைத்து 61,300 ரூபாயை திருடியுள்ளனர். கடந்த ஏப்ரல் 17ம் தேதி பாலக்கோடு நகர கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 39,828 ரூபாய் திருடியுள்ளனர். இதே போல் பல இடங்களில் அவர்கள் திருடியது தெரிந்தது. கார்த்திக் கொடுத்த தகவல் அடிப்படையில் பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரிந்த ஆறுமுகத்தையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 29,160 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.