Marandahalli Map

Wednesday, September 7, 2011

அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை

அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை
 
பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011,01:34 IST

  
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அரசு பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாரண்ட அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 90 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி கனிமொழி, 480 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்தார். விஜயலட்சுமி, 476 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும், நவீனா என்ற மாணவி, 474 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும், பவித்ரா, உமா ஆகிய மாணவிகள், 473 மதிப்பெண்கள் பெற்று நான்காவது இடமும் பிடித்தனர்.சாதனை படைத்த மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வரதராஜன், உதவி தலைமை ஆசிரியர் ஜெயசீலன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கசரவணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments: