Marandahalli Map

Monday, March 19, 2012

ரூ.96 லட்சம் மோசடி: ஒருவர் கைது

ரூ.96 லட்சம் மோசடி: ஒருவர் கைது


Feb 26, 2012
பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ரூ.96 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், டாக்டர் உள்பட 5 பேரை தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸôர் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுப்படுவது: தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்துக்குள்பட்ட பச்சினம்பட்டியைச் சேர்ந்தவர் உதயசந்திரன் (43). இந் நிலையில், மாரண்டஹள்ளியில் மருத்துவமனை நடத்திவரும் ஹோமியோபதி மருத்துவரான ஜெயசந்திரனுடன் (45) உதயசந்திரனுக்கு பழக்கம் கிடைத்தது. இருவரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் தலா ரூ.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பணத்தைத் திருப்பி தராததால் பெல்ராம்பட்டியைச் சேர்ந்த சலீம் ஷா உள்பட 7 பேர், தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர். இதில், உதயசந்திரனை போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் உதயசந்திரனின் மனைவி பரிமளா, ஜெயசந்திரன், அவரது மனைவி ஜெயஸ்ரீ, தம்பி ஜெயராஜ், மைத்துனர் சோலை ஆகிய 5 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.

விஷம் குடித்து பெண் சாவு: ஆர்டிஓ விசாரணை

விஷம் குடித்து பெண் சாவு: ஆர்டிஓ விசாரணை
First Published : 07 Mar 2012 03:18:02 PM IST
தருமபுரி, மார்ச் 6:
மாரண்டஹள்ளி அருகே உள்ள செட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (30). இவரது மனைவி மணிமேகலை (23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகின்றன. 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மணிமேகலை, விஷம் குடித்து மயங்கிய நிலையில் திங்கள்கிழமை கிடந்தார். வீடு திரும்பிய ராஜா, அவரை மீட்டு மாரண்டஹள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த மருத்துவர்கள், மணிமேகலை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது தந்தை திம்மராயன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகியுள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வெயில் உக்கிரம் அதிகரிப்பால் இளநீர் தட்டுப்பாடு : வெளி மாநில வியாபாரிகள் கொள்முதல்

வெயில் உக்கிரம் அதிகரிப்பால் இளநீர் தட்டுப்பாடு : வெளி மாநில வியாபாரிகள் கொள்முதல்


பதிவு செய்த நாள் :
பிப்ரவரி 29,2012,02:11 IST

தர்மபுரி : கோடைக்கு முன் வெயில் உக்கிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் இளநீருககு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதல் தரமான இளநீர் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்வதால், வரும் நாட்களில் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 0.38 மில்லியன் ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், நெல்லை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
தென்னையை பொறுத்த வரையில் கற்பக விருச்சக மரமாகும். தென்னையில் இளநீர் முதல் மட்டை வரையில் விவசாயிகளுக்கு லாபத்தை கொடுக்கும் என்பதோடு, தென்னை மரங்களில் ஆயுட்காலமும் அதிகம் என்பதால் தென்னை விவசாயிகளுக்கு நஷ்டம் அதிகம் ஏற்படுவதில்லை.
வறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றப்படி தென்னை விவசாயத்தை பொறுத்த வரையில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் சராசரி லாபத்தை கொடுக்கும் பணப்பயிராக தென்னை சாகுபடி இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் கோடை காலங்களில் இளநீருக்கு அதிக அளவில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து அறுவடை அதிகம் நடக்கும். ஆண்டு முழுவதும் இளநீர் விற்பனை இருந்த போதும், கோடை காலங்களில் வெளி மாநில வியாபாரிகள் வருகை அதிகம் இருப்பதால், தர்மபுரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் இளநீரில் 40 சதவீதம் வரையில் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது.
கோடை கால விற்பனையை குறி வைத்து தர்மபுரி மாவட்ட வியாபாரிகளும், வெளி மாநில வியாபாரிகளும், நேரடியாக தென்னை விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதோடு, முதல் தரமான இளநீர் அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் முன் கூட்டியே குத்தகை அடிப்படையில் தோட்டங்களை எடுத்து காய்களை பறித்து விற்பனைக்கு எடுத்து செல்வர்.
இதனால், கோடை காலங்களில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து மாரண்டஹள்ளி, வெள்ளி சந்தை, பாலக்கோடு, அரசம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து அதிக அளவில் தென்னை தோட்டங்களை வியாபாரிகள் குத்தகைக்கு எடுத்து வெளி மாநிலங்களுக்கு குறிப்பாக கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அதிக அளவில் இளநீர் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
உள்ளூர் வியாபாரிகள் சிறு விவசாயிகளிடம் இருந்து முன் பணம் கொடுத்து இளநீர் அறுவடை செய்து விற்பனை செய்கின்றனர். ஃபிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து கோடை வெயில் உக்கிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து இளநீர் விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகம் பனி காற்றின் தாக்கம் இருந்த போதும், இளநீர் 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெயில் உக்கிரத்தை தொடர்ந்து இளநீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை அதிகரிப்பு காரணமாக கடந்த நாட்களில் காலை முதல் மாலை வரையில் இளநீர் வியாபாரிகள் விற்பனை செய்த நிலை மாறி தற்போது, காலை நேரங்களில் மட்டுமே இளநீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இளநீருக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்படும் நிலையிருப்பதால், விலை ஏற்றத்துக்கும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தட்டுப்பாட்டை சமாளிக்க வியாபாரிகள் வீடுகளில் உள்ள தென்னை மரங்களிலும் காய்களை பறிக்க முன் பணம் கொடுத்து விற்பனை தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தர்மபுரியில் 14.7 டன் புளி ஏலம்: நேரடி விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி

தர்மபுரியில் 14.7 டன் புளி ஏலம்: நேரடி விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012,21:00 IST

தர்மபுரி: தர்மபுரி மதிக்கோன்பாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூட்டத்தில் விவசாயிகள் நேரடி விற்பனை புளி ஏலத்தில் 14.7 டன் புளி விற்பனை நடந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மதிக்கோன்பாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்தாண்டு முதல் வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் விவசாயிகள் கொண்டு வரும் புளியை நேரடியாக விற்பனை செய்ய வேளாண் விற்பனை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் இருந்து ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த வாரம் 54 டன் புளி 11 லட்ச ரூபாய்க்கு விற்பனை நடந்தது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தின் போது, தர்மபுரி, தொப்பூர், ஜருகு, நவலை, ஜாலிகொட்டாய், கடத்தூர், அரூர், பென்னாகரம், மாரண்டஹள்ளி மற்றும் தர்மபுரி சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தொட்டு புளி மற்றும் தோசை புளி விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், 3 லட்ச ரூபாய்க்கு 14.7 டன் புளி விற்பனை நடந்தது. தொட்டு புளி அதிக பட்சம் 16 ரூபாய் 75 பைசாவுக்கும், குறைந்த பட்சம் 12 ரூபாய்க்கும், தோசைப்புளி அதிகப்பட்சம் 71 ரூபாய் 50 பைசாவுக்கும், குறைந்தபட்சம் 67 ரூபாய்க்கும் விற்பனை நடந்தது. கொட்டை புளி அதிகபட்சம் 25 ரூபாய்க்கும், குறைந்த பட்சம் 20 ரூபாய்க்கும் விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் புளி விலை கிலோவுக்கு 11 ரூபாய் குறைவாக விற்பனை நடந்தது.

இறந்தவர்கள் கண் தானம்

இறந்தவர்கள் கண் தானம்



பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2012,04:04 IST
தர்மபுரி:
மாரண்டஹள்ளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம்மாள் (80). இவரும் இயற்கை மரணம் அடைந்தார். அவரது கண்களை தானம் செய்ய அவரது மகன் செல்வமணி தர்மபுரி லயன்ஸ் சங்கத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
தர்மபுரி கண் தான மையத்தில் இது வரையில் இறந்த 216 பேர்களிடம் இருந்து கண் தானம் பெறப்பட்டுள்ளது.இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய விரும்புவோர் தர்மபுரி கண் தான மைய டெலிஃபோன் எண் 04342 - 260 696, 264 696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, March 17, 2012

மாரண்ட அ ள்ளியில் அதன் சுற்று வட்டார பகுதியில் நடந்து காஞ்ச கூட்டம் படபிடிப்பு...

விஜயா பிலிம்ஸ் சார்பில் எஸ்.விஜயகுமாரி, டி.கே.குமரன், ஸ்ரீ பாலாஜிபெரியசாமி இணைந்து தயாரிக்கும் புதிய படம் கஞ்சா கூட்டம்.

தீய வழிமுறைகளால் அழிய இருக்கும் ஒரு கிராமத்தை நான்கு இளைஞர்கள் எப்படி காப்பாற்ற போராடுகிறார்கள் என்பதை காதல் மற்றும் நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான திரைக்கதையாக கஞ்சா கூட்டம் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் புதுமுகங்கள் லிங்கா, வினோ, டிக்சன், கமல் மற்றும் ஸ்ரீதேவி, சக்தி இவர்களுடன் குமரன், பாலாஜிபெரியசாமி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் ஆகியவற்றை டி.எஸ்.திவாகர் ஏற்றுள்ளார்.

P.T. ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, என்.பாலு படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். தர்மபுரி, ஒகேனக்கல், கவண்டனூர், மாரண்டஅள்ளி, காரிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.
நன்றி: தினமலர்.காம்