
தர்மபுரி மாவட்டம்
தலைநகர் | தருமபுரி |
மொத்த பரப்பு | 9,622 ச.கி.மீ |
மக்கள் தொகை | 24,28,596 |
எழுத்தறிவு | 9,41,444 |
மழையளவு சராசரி | 857மி.மீ |
காடுகள் | 3,66,231 ஹெக்டேர் |
சாலைகளின் நீளம் | 5,796கி.மீ |
காவல் நிலையங்கள் | 52 |
திரையரங்குகள் | 142 |
வரலாறு:
சங்க காலத்தில் தர்மபுரியின் பெயர் தகடூர். இவ்வூரை அதியமான்
ஆண்டதாக இலக்கியம் கூறுகிறது. பிற்காலத்தில்
சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையால் அதியமான் மகன் எழினி தோற்கடிக்கப்ப
ட்டான். இதனை 'தகடூர் யாத்திரை' என்ற தமிழிலக்கியம்
விரிவாக விளக்குகிறது. சேரரின் ஆட்சிக்குப் பிறகு தர்மபுரி எ
ன வழங்கும் தகடூர், நுளம்பர், சோழர், மீண்டும் அதியமான்கள், ஹொய்சாளர், வி
ஜய நகர மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் பிஜ
ப்பூர் சுல்தான்களின் ஆளுகையின் கீழ் தருமபுரி இந்தது. 1652 முதல் 1768 வரை
மைசூர் மன்னர்களின் மேலாண்மையின்
கீழ் இருந்தது. இக்காலத்தில் கன்னடர்கள்
பெருமளவில் இம்மாவட்டத்தில்
குடியேறினர். இவர்களுக்கு முன்பே விஜயநகர காலத்தில் தெலுங்கர்கள் மாவட்டம் முழுவதும்
பரவி வாழ்ந்து வருகின்ற
னர். 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலத் தளபதி வுட்
என்பவன் பிரிட்டீஸ் இந்தியப் பகுதிக்குள் தர்மபுரியை கொண்டு வந்தான். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில்
சேலம் மாவட்டத்துடன்
தர்மபுரி இணைந்தே இருந்தது. 1965-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தை இ
ரண்டாகப் பிரித்து தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
எல்லைகள்:
இம்மாவட்டத்தின் கிழக்கே வேலூர்,
திருவண்ணாமலை,
விழுப்புரம் மாவட்டங்களும், மேற்கே கர்நாடக மாநிலத்தின் பெ
ங்களூர், மைசூர் மாவட்டங்
களும், வடபகுதியில் கர்நாடகமாநிலம் மற்றும் ஆந்திர
த்தின் சித்தூர் மாவட்டமும், தென் பகுதி
யில் சேலம் மாவட்டமும் எல்லைகளாக
அமைந்துள்ளன.
ஆறுகள்:
காவிரி, தென்பெ
ண்ணை, தொப்பையாறு, வன்னியாறு
, மார்க்கண்ட நதி, தோப்பூர் ஆறு, சனத்குமாரந
தி, கம்பையநல்லூர் ஆறு, பாம்பாறு
முதலியவை. இவ்வாறுகளால் மாவட்டத்தில் விவசாயம் சிறப்
பாக செயல்பட்டு வருகிறது.
அணைகள்
ஓசூர் வட்டத்தில் அஞ்செட்டிக்
கருகில் சனத்குமார நதியில் அணைகட்டப்பட்டு
ள்ளது.தர்மபுரிவட்டத்தில் மாரண்டஹள்
ளி அணைக்கட்டு பெரியதாக விளங்குகிறது. சின்னாறு
நீர்த்தேக்கம் 1958-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனால் 2600
ஏக்கர் நிலம் பயனடைகிறது.
வருவாய் நிர்வாகப் பிரிவு
நகராட்சி
கள் 3;
ஊராட்சி ஒன்றியம் 18;
பேரூராட்சிகள் 17;
கிராம பஞ்
சாயத்துக்கள் 588;
சட்டசபை தொகுதிகள் - 10
ஓசூர், தளி,
காவேரிப்பட்டினம்,
கிருஷ்ணகிரி,
பர்கூர்,
அரூர், மொரப்பூர்,
பாலக்கோடு,
தர்மபுரி,
பென்னாகரம்.
பாராளுமன்ற தொகுதிகள் - 2
தர்மபுரி,
கிருஷ்ணகிரி.

No comments:
Post a Comment