Marandahalli Map

Tuesday, October 25, 2011

சுயேட்சைகள் பிடியில் டவுன் பஞ்., துணை தலைவர் பதவி : மூன்றில் மட்டும் அ.தி.மு.க., பெரும்பான்மை

* மாரண்டஅள்ளி டவுன் பஞ்சாயத்து தலைவராக அ.தி.மு.க., கலைவாணி வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க., ஏழு வார்டுகளிலும், தி.மு.க., மூன்று,
சுயேச்சை ஐந்து வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
துணை தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வுக்கு மேலும் இரு கவுன்சிலர் ஆதரவு தேவை.
இங்கும் சுயேச்சைகளை இழுக்க முயற்சிகள் நடக்கிறது.

மாரண்டஅள்ளி பேரூராட்சிஅதிமுக வெற்றி

லக்கோடு: மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சாவித்திரி, அதிமுக சார்பில் கலைவாணி உள்ளிட்ட 6 பேர் போட்டியிட்டனர்.
இதில் அதிமுக வேட்பாளர் கலைவாணி 2960 வாக்கு பெற்று வெற்றிபெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சாவித்திரி 1389 வாக்கு பெற்றார்.

இந்த பேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் விபரம் வருமாறு:
1வது வார்டுக்கு தங்க சரவணன்(திமுக),
2வது வார்டுக்கு உஷா(திமுக),
3வது வார்டுக்கு கோவிந்தன்(அதிமுக),
4வது வார்டுக்கு கண்ணன்(அதிமுக),
5வது வார்டுக்கு காசிநாதன்(அதிமுக),
6வது வார்டுக்கு மகேந்திரன்(அதிமுக),
7வது வார்டுக்கு செந்தில்(அதிமுக),
8வது வார்டுக்கு மணிகண்டன்(சுயேட்சை),
9வது வார்டுக்கு இந்திராணி(சுயேட்சை),
10வது வார்டுக்கு புவனேஷ்வரி(சுயேட்சை),
11வது வார்டுக்கு ஆனந்தி(அதிமுக),
12வது வார்டுக்கு சரோஜா(சுயேட்சை),
13வது வார்டுக்கு சின்னச்சாமி(சுயேட்சை),
14வது வார்டுக்கு தேவி(சுயேட்சை),
15வது வார்டுக்கு பாலசுப்பிரமணியம் (அதிமுக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பேரூராட்சியில் அதிமுக 7 இடங்களையும்,
திமுக 2 இடங்களையும், சுயேட்சைகள் 6 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

15வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலசுப்பிரமணியம் அதிமுக நகர செயலாளராக உள்
ளார்.

மாரண்டஅள்ளி பேரூராட்சிஅதிமுக வெற்றி

லக்கோடு: மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சாவித்திரி, அதிமுக சார்பில் கலைவாணி உள்ளிட்ட 6 பேர் போட்டியிட்டனர்.
இதில் அதிமுக வேட்பாளர் கலைவாணி 2960 வாக்கு பெற்று வெற்றிபெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சாவித்திரி 1389 வாக்கு பெற்றார்.

இந்த பேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் விபரம் வருமாறு:
1வது வார்டுக்கு தங்க சரவணன்(திமுக),
2வது வார்டுக்கு உஷா(திமுக),
3வது வார்டுக்கு கோவிந்தன்(அதிமுக),
4வது வார்டுக்கு கண்ணன்(அதிமுக),
5வது வார்டுக்கு காசிநாதன்(அதிமுக),
6வது வார்டுக்கு மகேந்திரன்(அதிமுக),
7வது வார்டுக்கு செந்தில்(அதிமுக),
8வது வார்டுக்கு மணிகண்டன்(சுயேட்சை),
9வது வார்டுக்கு இந்திராணி(சுயேட்சை),
10வது வார்டுக்கு புவனேஷ்வரி(சுயேட்சை),
11வது வார்டுக்கு ஆனந்தி(அதிமுக),
12வது வார்டுக்கு சரோஜா(சுயேட்சை),
13வது வார்டுக்கு சின்னச்சாமி(சுயேட்சை),
14வது வார்டுக்கு தேவி(சுயேட்சை),
15வது வார்டுக்கு பாலசுப்பிரமணியம் (அதிமுக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பேரூராட்சியில் அதிமுக 7 இடங்களையும்,
திமுக 2 இடங்களையும், சுயேட்சைகள் 6 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

15வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலசுப்பிரமணியம் அதிமுக நகர செயலாளராக உள்
ளார்.

தீபாவளி பண்டிகைக்காக மாரண்டஅள்ளி சந்தையில் ஆடு விற்பனை அதிகரிப்பு

பாலக்கோடு: மாரண்டஅள்ளியில் புகழ் பெற்ற ஆட்டு சந்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று கூடுவது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் வாரச்சந்தை கூடியது. புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாதமாக மாரண்டஅள்ளி சந்தையில் ஆடு விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது புரட்டாசி முடிந்து விட்டதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் நேற்று சந்தையில் ஆடு விற்பனை அதிகளவில் நடந்தது.
கடந்த 5 வாரங்களாக 1500 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. நேற்று நடந்த சந்தையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரங்களில் 25 முதல் 30 கிலோ எடை கொண்ட ஒரு வெள்ளாடு ஞி5500க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞி6500க்கும் அதிகமாக இந்த ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஞி2500 முதல் ஞி3 ஆயிரம் வரை விற்பனையாகும் செம்மரி ஆடு நேற்று ஞி3500க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.
பாப்பாரப்பட்டி, பையூர், காவேரிபட்டணம், பென்னாகரம், அத்திமுட்லு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 30 முதல் 50 கிலோ எடை கொண்ட ராட்சத வெள்ளாடுகள் விற்பனைக்கு வந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகள் அதிக விலைக்கு விற்றதால் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தண்ணியில்லா காட்டில் தத்தளிக்கும் கட்சிகள்:தர்மபுரி மாவட்ட நிலவரம்

தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, மொரப்பூர், அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்பில், மொரப்பூர் நீக்கப்பட்டு, புதிதாக பாப்பிரெட்டிபட்டி உருவாக்கப்பட்டுள்ளது.பாலக்கோடு: அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் இங்கு எம்.எல்.ஏ., வாக உள்ளார். இவர் எதிர்க்கட்சியில் இடம்பெற்றதால், குறிப்பிட்டுச் சொல்லும்படியான பணிகள் நடக்கவில்லை.
விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட பாலக்கோட்டில், சின்னாற்று தண்ணீரை தொகுதியில் பல்வேறு பகுதிக்கு பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை. தொலைக்காது நீர்த்தேக்கத் திட்டப் பணிகள் உள்ளிட்ட பாசன வசதிக்கான எல்லா திட்டங்களும் கிடப்பில் உள்ளன.சின்னாறு படுகை இருந்தபோதும், ஆண்டுதோறும் கோடை காலங்களில் மாரண்டஹள்ளி பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியவில்லை.அமைச்சராக இருந்தபோது செய்த பணிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு உள்ள செல்வாக்கு அன்பழகனுக்கு சாதகமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இத்தொகுதியை பா.ம.க.,வுக்கு ஒதுக்கியுள்ளதால், அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றி வாய்ப்பு சுலபமாக இருக்கும்.

Saturday, October 22, 2011

விதி மீறிய அரசியல் கட்சியினர்கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீஸார்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த பல பகுதியில் அரசியல் கட்சியினர் ஓட்டு சாவடி முன் குவிந்திருந்து வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டதால், பல ஓட்டு சாவடிகளில் அரசியல் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி போகினர்.தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரண்டாம் கட்டமாக நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களுக்கும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி ஆகிய ஐந்து டவுன் பஞ்சாயத்துக்கும் மொத்தம் 838 ஓட்டு சாவடிகளில் தேர்தல் நடந்தது.தேர்தல் நடக்கும் பகுதியில் பதட்டமான ஓட்டு சாவடிகளில் கூடுதல் போலீஸாரும், சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இருந்த போதும் நேற்று பல இடங்களில் அரசியல் கட்சியினர் விதி முறை மீறி ஓட்டு சாவடி முன் குவிந்தனர். அரசியல் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி போயினர்.குறிப்பாக நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட அனைத்து ஓட்டு சாவடிகள் முன்பும் அரசியல் கட்சினர் நின்று கொண்டு ஓட்டு போட வந்த பொதுமக்களிடம் ஓட்டு கேட்டும், ஓட்டு போட சொல்லியும் வலியுறுத்தினர்.

டவுன் பஞ்., தலைவர் பதவி அ.தி.மு.க., 7ல் வெற்றி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 10 டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிகளில் அ.தி.மு.க., ஏழு இடங்களிலும் தி.மு.க., - பா.ம.க., - சுயேச்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றனர்.கம்பைநல்லூர் டவுன் பஞ்சாயத்து: அ.தி.மு.க., வெற்றி தனசேகர் (அ.தி.மு.க.,) 3,259, மாதேஸ்வரன் (தி.மு.க.,) 2,634. மொத்தம் 15 வார்டுகளில் அ.தி.மு.க., ஆறு, தி.மு.க., மூன்று, சுயேச்சை மூன்று, பா.ம.க., இரண்டு, தே.மு.தி.க., ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.


* மாரண்டஅள்ளி டவுன் பஞ்சாயத்து: அ.தி.மு.க., வெற்றி கலைவாணி பாலசுப்பிரமணியன் (அ.தி.மு.க.,) 2,960, சாவித்ரி (தி.மு.க.,) 1,389. மொத்தமுள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க., ஏழு வார்டுகளிலும், தி.மு.க., மூன்று, சுயேச்சை ஐந்து வார்டுகளிலும் வெற்றிபெற்றனர்.

Friday, October 21, 2011

கிராமங்களில் பிரியாணியுடன் வாக்காளர்களுக்கு விருந்து

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலின் போது கிராம பகுதி வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் சார்பில் பிரியாணி வழங்கப்பட்டது.
தேர்தல் கமிஷன் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் வழங்கும் இலவசங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்த போதும், மறைவான பகுதியில் இருந்து வேட்பாளர்களுக்கு பணம் மற்றும் பிரியாணிகள் வழங்குவது உள்ளாட்சி தேர்தலிலும் நடந்தது.தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட பாகலஅள்ளி, சேசம்பட்டி உள்ளிட்ட பல பஞ்சாயத்துக்களிலும், பொ.மல்லாபுரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி உள்ளிட்ட டவுன் பஞ்சாயத்து பகுதியிலும் வேட்பாளர்கள் பலர் ஓட்டு சாவடிக்கு 200 மீட்டருக்கு முன் நின்று வாக்காளர்களை தங்களுக்கு ஓட்டு போடும்படி வேண்டுகோள் விடுத்தனர்.