பொருட்களை திருடிய வாலிபர் அதிரடி கைது
2014
02:45
பதிவு செய்த நாள்
02ஏப்2014
02:45
மாரண்ட ஹள்ளி : தர்மபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளியில்,
தனியார் பள்ளியில் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷன் எதிரே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால், பள்ளியின் சத்துணவு ஊழியர்கள் மட்டுமே பள்ளியில் இருந்தனர். இந்நிலையில், பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, பள்ளியில் இருந்த கட்டுமான பொருட்களை, மர்மநபர் ஒருவர் திருடி கொண்டிருப்பதை, சத்துணவு ஊழியர்கள் கண்டனர்.
இதுகுறித்து, அவர்கள், பள்ளி தாளாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது புகாரின் பேரில், மாரண்டஹள்ளி போலீஸார், விரைந்து சென்று, அந்த மர்நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த நபர், எம்.வெட்டுஹள்ளியை சேர்ந்த மாதேஸ்,30 என்பதும், கட்டுமான பொருட்களை திருடி, விற்பனை செய்ய முயற்சித்ததும், தெரியவந்தது. இதனையடுத்து, மாதேஸை, போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து, அவர்கள், பள்ளி தாளாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது புகாரின் பேரில், மாரண்டஹள்ளி போலீஸார், விரைந்து சென்று, அந்த மர்நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த நபர், எம்.வெட்டுஹள்ளியை சேர்ந்த மாதேஸ்,30 என்பதும், கட்டுமான பொருட்களை திருடி, விற்பனை செய்ய முயற்சித்ததும், தெரியவந்தது. இதனையடுத்து, மாதேஸை, போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment