கோடை மழை அறிகுறி துவக்கம் மாவட்ட விவசாயிகள் நம்பிக்கை
2014
06:25
பதிவு செய்த நாள்
16ஏப்2014
06:25
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கோடை மழைக்கான அறிகுறி துவங்கி உள்ளதால், சித்திரை பட்டத்தில் பயிர்களை நடவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். மாவட்டத்தில், இறவை பாசனத்தில் நெல், கரும்பு, மஞ்சள், தக்காளி, மரவள்ளி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை பயிர்கள், மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதே போன்று, விவசாயிகள் தென்கிழக்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை மற்றும் கோடை மழையில் சித்திரை பட்டத்திலும், பயிர்களை மானாவாரியாகவும், இறவை பாசனத்திலும் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்தாண்டு, மாவட்டத்தில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மாவட்டத்தில், கடந்த ஃபிப்ரவரி மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம், 20ம் தேதி முதல் வெயிலின் அளவு, 100 டிகிரியை தாண்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
கடந்தாண்டு, ஏப்ரல் மாதம் கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்ததுடன், சித்திரை பட்டத்தில் பயிர்களை சாகுபடி செய்ய உழவு பணிகளை செய்ய முடிந்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்தாண்டை போல் இந்தாண்டும், கடந்த சில தினங்களாக கோடை மழை, வெறும் சாரலோடு மட்டுமே நின்றதால், விவசாயிகளும், மக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த, 6ம் தேதி ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் பகுதியில் கோடை மழை பெய்ததால், அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தர்மபுரியிலும், சில தினத்துக்கு முன் லேசான மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், மாரண்ட அள்ளி பகுதிகளில், 33 மில்லி மீட்டர் மழையும், ஒகேனக்கல்லில், 22 மில்லி மீட்டர் மழையும் பெய்தததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சித்திரை பட்டத்தில் பயிர்களை நடவு செய்ய மாவட்டத்தில் கோடை மழை பெய்யும் என விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். மாவட்டத்தில், இறவை பாசனத்தில் நெல், கரும்பு, மஞ்சள், தக்காளி, மரவள்ளி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை பயிர்கள், மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதே போன்று, விவசாயிகள் தென்கிழக்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை மற்றும் கோடை மழையில் சித்திரை பட்டத்திலும், பயிர்களை மானாவாரியாகவும், இறவை பாசனத்திலும் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்தாண்டு, மாவட்டத்தில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மாவட்டத்தில், கடந்த ஃபிப்ரவரி மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம், 20ம் தேதி முதல் வெயிலின் அளவு, 100 டிகிரியை தாண்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
கடந்தாண்டு, ஏப்ரல் மாதம் கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்ததுடன், சித்திரை பட்டத்தில் பயிர்களை சாகுபடி செய்ய உழவு பணிகளை செய்ய முடிந்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்தாண்டை போல் இந்தாண்டும், கடந்த சில தினங்களாக கோடை மழை, வெறும் சாரலோடு மட்டுமே நின்றதால், விவசாயிகளும், மக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த, 6ம் தேதி ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் பகுதியில் கோடை மழை பெய்ததால், அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தர்மபுரியிலும், சில தினத்துக்கு முன் லேசான மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், மாரண்ட அள்ளி பகுதிகளில், 33 மில்லி மீட்டர் மழையும், ஒகேனக்கல்லில், 22 மில்லி மீட்டர் மழையும் பெய்தததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சித்திரை பட்டத்தில் பயிர்களை நடவு செய்ய மாவட்டத்தில் கோடை மழை பெய்யும் என விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment