Marandahalli Map

Thursday, April 19, 2012

ராஜேந்திரன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி....,

இரு பைக் மோதல்அரசு ஊழியர் ராஜேந்திரன் பலி
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2012,00:31 IST
தர்மபுரி: பாலக்கோடு அருகே இரு பைக் மோதியதில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய புள்ளியாளர் பரிதாபமாக இறந்தார்.
மாரண்டஹள்ளி பவுண்ட் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார புள்ளியாளராக பணிபுரிகிறார். இவர் நேற்று மதியம் தன்னுடன் பணிபுரியும் சேகருடன் பாலக்கோட்டிலிருந்து தர்மபுரிக்கு பைக்கில் சென்றார். கடமடை ரயில்வே கேட் அருகே சென்ற போது, எதிரே வந்த பைக் ராஜேந்திரன் பைக் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரன், சேகரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழியில் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். 



Monday, April 16, 2012

அரசு பள்ளி ஆசிரியர் சாவு

அரசு பள்ளி ஆசிரியர் சாவு
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012,06:12 IST

தர்மபுரி: பாலக்கோடு அருகே நெஞ்சுவலியால் அரசு பள்ளி ஆசிரியர் திடீரென்று இறந்தார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் கே.வி.ஆலங்குளத்தை சேர்ந்தவர் அருள்சேமராஜ் (35).
 தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே சொரகுறுக்கை அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
மாரண்டஅள்ளியில் நண்பர் நாகராஜூடன் வீடு எடுத்து தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் மாலை அருள்சேமராஜ் வீட்டில் சாப்பிட்டுகொண்டிருந்தார். அப்போது, திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அவரை அப்பகுதி மக்கள்  மாரண்டஅள்ளி  ஆரம்ப சுகாதார நிலையத்திற் அழைத்து சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகராஜ் மாரண்டஅள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.

Thursday, April 5, 2012

மாரண்டஹ‌ள்ளி




தர்மபுரி அருகே கட்டாய திருமணம் செய்த இளம்பெண் மீண்டும் கடத்தல்: எஸ்.பி.யிடம் புகார்

தர்மபுரி அருகே கட்டாய திருமணம் செய்த இளம்பெண் மீண்டும் கடத்தல்: எஸ்.பி.யிடம் புகார்

கருத்துக்கள்
தர்மபுரி அருகே கட்டாய திருமணம் செய்த இளம்பெண் மீண்டும் கடத்தல்: எஸ்.பி.யிடம் புகார்
தர்மபுரி, பிப். 21-

தர்மபுரியை அடுத்த மாரண்டஅள்ளி அருகே உள்ள செட்டி அள்ளியை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மனைவி பெருமா. இவர் தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் அஞ்சலியை கடந்த 2004-ம் ஆண்டு கோவிந்தசாமி மகன் அர்ச்சுணன் கடத்தி சென்றார். பின்னர் அஞ்சலியை கைகளை கட்டி வைத்து கட்டாய திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே நான் தர்மபுரி முதன்மை அமர்வு நிதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தேன்.

அதன்பிறகு எனது மகளை போலீசார் மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு பல முறை என் வீட்டிற்கு வந்த அர்ச்சுணன் எனது மகளை அழைத்து செல்ல வந்தார். நான் மறுத்த போதெல்லாம் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதற்கிடையே கடந்த 16-ந்தேதி மீண்டும் அர்ச்சுணன் வந்தார். நான் தாலி கட்டிய மனைவி அஞ்சலி அதனால் அவரை என்னிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்றார். அதற்கு நான் எனது மகள் விருப்பம் இல்லாமல் கட்டாய திருமணம் செய்து கொண்டாய், அதனால் உன்னிடம் அனுப்பி வைக்க முடியாது என்று கூறினேன்.

இதனால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி எனது மகள் அதிகாலை காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த அர்ச்சுணன் எனது மகள் அஞ்சலியை கடத்தி சென்றுவிட்டார். எனது மகள் எங்கு இருக்கிறார். அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இது பற்றி மாரண்டஅள்ளி போலீசில் புகார் கொடுக்க சென்றேன். ஆனால் அவர்கள் எனது புகாரை வாங்க மறுத்துவிட்டார்கள். எனது மகளை கண்டு பிடித்து எங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

மேலும் எனது மகளை கடத்தி சென்றதோடு, கொலை மிரட்டல் விடுத்த அர்ச்சுணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. உறுதி அளித்தார். இதே போன்று டி.ஐ.ஜி. க்கும் தனது மகள் காணாதது பற்றி பெருமா, புகார் மனு அனுப்பி உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு அஞ்சலி 10-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார். அப்போது அர்ச்சுணன் கடத்தி சென்றதால் அதன் பிறகு பள்ளி படிப்பை விட்டு வீட்டிலேயே அஞ்சலி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அஞ்சலி கடத்தப்பட்டு உள்ளார்.

விபத்தில் 3 பேர் படுகாயம்

விபத்தில் 3 பேர் படுகாயம்

கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-04-05 09:53:௨௦
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே நடந்த விபத்தில் மாரண்டஅள்ளி வாலிபர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நல்லூரை சேர்ந்தவர் தொட்டியப்பன் மகன் முரளி(25). இவர் அதே ஊரை சேர்ந்த சுதாகர்(27), அருள்மணி(36) ஆகியோருடன் ஈரோட்டில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் யுகாதி பண்டிக்கைகாக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் சூளகிரிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ராயக்கோட்டை தக்காளி மார்க் கெட் அருகே சென்றபோது எதிரே வந்த வேன் மோதுவதுபோல் வந்தது. உடனே, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முரளி திடீர் பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் 3 பேரும் கீழே விழுந்து படுகாய மடைந்தனர். இவர்களுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து ராயக்கோட்டை எஸ்ஐ ஆனந்தன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

மாரண்டஅள்ளி அருகே இன்ஸ்பெக்டர் மனைவி தீக்குளித்து தற்கொலை எஸ்.பி. விசாரணை

மாரண்டஅள்ளி அருகே இன்ஸ்பெக்டர் மனைவி தீக்குளித்து தற்கொலை எஸ்.பி. விசாரணை

பதிவு செய்த நேரம்:2012-03-30 10:18:௧௮

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே இன்ஸ்பெக்டரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் விஸ்வநாதன். சிக்கமாரண்டஅள்ளியில் வசித்தார். இவரது மனைவி கலைச்செல்வி (33). இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
நேற்று காலை கலைச்செல்வி வழக்கம்போல் தனது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டில் தண்ணீர் வரவில்லை. இதனால் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனுக்கும், கலைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், விஸ்வநாதன் பணிக்கு சென்று விட்டார்.
அவர் சென்ற அரை மணி நேரத்தில் வீட்டு கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு கலைச்செல்வி தீ வைத்துக் கொண்டார். ஆண் குழந்தை வீட்டின் வெளியே கதறி அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் விஸ்வநாதனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் வீட்டு க்கு விரைந்து வந்தார். வீட்டு கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்றார். அங்கு கலைச்செல்வி உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை விஸ்வநாதன் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தர்மபுரி மாவட்ட எஸ்.பி அமீத்குமார் சிங், டி.எஸ்.பி. நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கலைச்செல்வியின் சகோதரர் நாமக்கல்லை சேர்ந்த மான்சிங் என்பவர் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது சகோதரி கலைச்செல்விக்கு முன்கோபம் அதிகம். அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுவார். தண்ணீர் வரவில்லை என்பதால் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் தீக்குளித்துள்ளார் என்று கூறியுள்ளார். கலைச்செல்வியின் மரணத்துக்கான காரணம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

மாரண்டஅள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகம்: வியாபாரிகள் ஏமாற்றம்

மாரண்டஅள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகம்: வியாபாரிகள் ஏமாற்றம்


பதிவு செய்த நேரம்:2012-03-26 09:53:47
மாரண்டஅள்ளி: மாரண்டஅள்ளி ஞாயிறு சந்தையில் ஆடு விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது. பொதுமக்கள் போட்டிபோட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதனால் மொத்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் ஞாயிறு தோறும் சந்தை கூடுவது வழக்கம். யுகாதி பண்டிகையான வெள்ளிக்கிழமையன்று தர்மபுரி பகுதியில் பொதுமக்கள் பலர் அசைவத்தை தவிர்த்து வருகின்றனர். இதன்படி நேற்று அசைவ விருந்து படைக்க முடிவெடுத்தனர். இதையொட்டி, நேற்று மாரண்டஅள்ளியில் நடந்த வாரச்சந்தைக்கு படையெடுத்தனர். காலை 6 மணிக்கே ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது. நேற்று பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
பொதுமக்கள் போட்டிபோட்டு ஆடுகளை வாங்கினர். இதனால் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஒரு ஆடு ரூ5 ஆயிரம் முதல் ரூ8 ஆயிரம் வரை விலை போனது. விலையை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். காலை 9 மணிக்குள் அனைத்து ஆடுகளும் விற்றுத் தீர்ந்தன. அதே நேரத்தில், ஆடு களை மொத்த விலையில் வாங்க டெம்போக்களுடன் வந்திருந்த வியாபாரிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். ஆடுகள் அதிக விலைக்கு விற்றதாலும், பொதுமக்கள் குவிந்ததாலும், வியாபாரிகளால் ஆடுகளை வாங்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ரயில்வே ஸ்டேஷனில் மரங்கள் வெட்டி கடத்தல்

ரயில்வே ஸ்டேஷனில் மரங்கள் வெட்டி கடத்தல்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2012,02:28 IST
தர்மபுரி: மாரண்டஹள்ளி ரயில் ஸ்டேஷனில் வளர்கப்பட்டு வந்த 18 கருவேல மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹூப்ளி ரயில்வே கோட்டத்தில் தர்மபுரி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன் உள்ளன. இந்த ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் உயர் ரக மரங்கள் வளர்கப்பட்டு வருகிறது.
அதை ரயில்வே ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷனில் வளர்க்கப்பட்டு வந்த 18 கருவேல மரங்கள் திடீரென வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி ரயில் பாதுகாப்பு படை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் மரங்களை வெட்டி கடத்திய மர்மநபர்களை தேடிவருகின்றனர். மரங்களை ரயில்வே ஊழியர்களே வெட்டி கடத்தியிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் ரயில்வே ஊழியர்களிடம் விசாரிக்கின்றனர்.

மூன்று இடங்களில் திடீர் தீ விபத்து

மூன்று இடங்களில் திடீர் தீ விபத்து
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2012,01:11 IST
பாலக்கோடு: பாலக்கோடு அருகே மூன்று இடங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பாலக்கோடு அடுத்த கல்கோடப்பட்டியை சேர்ந்தவர் சித்ரா. இவரது தென்னந்தோப்பில் அருகே உள்ள முள்வேலியில் நேற்று முன்தினம் மாலை தீ பிடித்தது. தீ மளமளவென தென்னந்தோப்பிலும் பரவியது. கிராம மக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் அங்கு தீயை அணைத்தனர். இதில், தென்னை மரங்கள், விளக்கமாறு முடைவதற்காக வைக்கப்பட்டிருந்த ஓலைகள் நாசமானது.
* விளாம்பட்டி கிராம ஏரியில் உள்ள கருவேல முள் மரங்களில் நேற்று முன்தினம் மாலை தீ பிடித்தது. அந்த தீ அருகில் உள்ள விளை நிலங்களில் பரவும் சூழ்நிலை ஏற்பட்டது. இதகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்ற தீ பரவாமல் தடுத்தனர்.
* மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லுவை சேர்ந்தவர் மாதன் என்பவரது குடிசை வீட்டிலுல் தீ பிடித்தது. இதில், 15,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது

யுகாதி பண்டிகைக்கு ஆடு விற்பனை அமோகம்

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012,05:47 IST
தர்மபுரி: தர்மபுரி, மாவட்டத்தில், யுகாதி பண்டிகையொட்டி ஆடு விற்பனை சூடுபிடித்தது. பொதுமக்கள் போட்டு போட்டு வாங்கிச் சென்றதால், ஒரு ஆடு, 9,000 ரூபாய் வரை விற்பனையானது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது. யுகாதி பண்டிகை கொண்டாட்டமான கடந்த 23ம் தேதி பொதுமக்கள் அசைவ சாப்பாடு தவிர்த்து வீடுகளில் சைவ சாப்பாடு சமைத்து சாப்பிட்டனர். மேலும், வீடுகளில் இனிப்பு பண்டங்கள் செய்து அக்கம், பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர். யுகாதி முடிந்த மூன்றாம் நாளான நேற்று பொதுமக்கள், வீடுகளில் ஆடுகளை வெட்டி சமைத்து உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
இதையொட்டி தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனை கனஜோராக நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. காலை 6 மணி முதலே ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்கள், போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றதால் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஒரு ஆடு, 5,000 முதல் 8,000 ரூபாய் வரை விற்பனையானது.
சந்தை துவங்கி காலை 9 மணிக்குள் அனைத்து ஆடுகளும் விற்று தீர்ந்தது. இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, கெலமங்கம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் மகராஜகடை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் நடந்த சந்தையில் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால், ஒரு ஆடு, 9,000 ரூபாய் வரை விற்பனையானது. இறைச்சி கடைகளிலும் ஆட்டு இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.