மொரப்பூர்- தருமபுரி ரயில் பாதைத் திட்டத்தை மூன்றாண்டுகளில் நிறைவேற்றுவேன்
By
தருமபுரி,
First Published : 29 May 2014 04:06 AM IST
மொரப்பூர்- தருமபுரி இடையிலான ரயில் பாதைத்
திட்டத்தை வருகிற மூன்றாண்டுகளில் நிறைவேற்றப் பாடுபடுவேன் என தருமபுரி
மக்களவைத் தொகுதி பா.ம.க. உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உறுதி தெரிவித்தார்.
தருமபுரியில் புதன்கிழமை மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு முன்னாள் எம்பி ஆர்.செந்தில் தலைமை வகித்தார்.
இதில், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் பேசியது:
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான சென்னை- தருமபுரியை இணைக்கும் மொரப்பூர்- தருமபுரி இடையிலான ரயில் பாதைத் திட்டத்தை வருகிற மூன்றாண்டுகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு எதிராக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தலில் திமுக வீழ்ச்சியடைந்து விட்டது.
அதேபோல, வருங்காலத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்போது, அதிமுகவும் வீழ்ச்சிடையும்.
தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட என்னை பொது வேட்பாளராக கருதி அனைத்து சமுதாயத்தினரும் வாக்களித்துள்ளனர். அதேபோல, திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் எனக்கு வாக்களித்துள்ளனர். இந்தத் தொகுதி மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் என்னை வெற்றி பெற செய்துள்ளனர். அவர்களது நம்பிக்கையை நிறைவேற்றுவேன்.
மேலும், தருமபுரி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பேன்.
மக்களவைக் கூட்டத் தொடர் நேரம் தவிர, மற்ற நாள்களில் தருமபுரி தொகுதியில் இருப்பேன். இந்தத் தொகுதியை அனைத்து வகையிலும் முன்னேற்ற தொழில்சாலைகள், விவசாயம் சார்ந்த தொழில்சாலைகள் ஆகியவை கொண்டுவர பாடுபடுவேன். மேலும், தும்பலஅள்ளி உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை அளிப்பேன். தருமபுரி மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான நிதியை மாநில அரசிடமிருந்து பெறுவேன். தமிழக அரசு நிதி தர மறுத்தால் தொகுதி மக்களுடன் சேர்ந்து போராடி நிதி பெறுவேன்.
தருமபுரி தொகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மத்திய அரசின் நலத் திட்டங்களை பெற்றுத் தருவதுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். தருமபுரி தொகுதியில் வெற்றி பெற பாடுபட்ட கூட்டணி கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், வைகோ, ஏ.சி.சண்முகம், ஈஸ்வரன், பாரிவேந்தர் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அன்புமணி ராமதாஸ்.
கூட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவர் கே.பி.கந்தசாமி, பாஜக கோட்டப் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், தேமுதிக மாவட்டச் செயலாளர் மருத்துவர் வி.இளங்கோவன், மதிமுக மாவட்டச் செயலாளர் சம்பத், பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அ.சரவணன், முன்னாள் எம்எல்ஏ இல.வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரியில் புதன்கிழமை மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு முன்னாள் எம்பி ஆர்.செந்தில் தலைமை வகித்தார்.
இதில், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் பேசியது:
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான சென்னை- தருமபுரியை இணைக்கும் மொரப்பூர்- தருமபுரி இடையிலான ரயில் பாதைத் திட்டத்தை வருகிற மூன்றாண்டுகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு எதிராக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தலில் திமுக வீழ்ச்சியடைந்து விட்டது.
அதேபோல, வருங்காலத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்போது, அதிமுகவும் வீழ்ச்சிடையும்.
தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட என்னை பொது வேட்பாளராக கருதி அனைத்து சமுதாயத்தினரும் வாக்களித்துள்ளனர். அதேபோல, திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் எனக்கு வாக்களித்துள்ளனர். இந்தத் தொகுதி மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் என்னை வெற்றி பெற செய்துள்ளனர். அவர்களது நம்பிக்கையை நிறைவேற்றுவேன்.
மேலும், தருமபுரி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பேன்.
மக்களவைக் கூட்டத் தொடர் நேரம் தவிர, மற்ற நாள்களில் தருமபுரி தொகுதியில் இருப்பேன். இந்தத் தொகுதியை அனைத்து வகையிலும் முன்னேற்ற தொழில்சாலைகள், விவசாயம் சார்ந்த தொழில்சாலைகள் ஆகியவை கொண்டுவர பாடுபடுவேன். மேலும், தும்பலஅள்ளி உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை அளிப்பேன். தருமபுரி மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான நிதியை மாநில அரசிடமிருந்து பெறுவேன். தமிழக அரசு நிதி தர மறுத்தால் தொகுதி மக்களுடன் சேர்ந்து போராடி நிதி பெறுவேன்.
தருமபுரி தொகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மத்திய அரசின் நலத் திட்டங்களை பெற்றுத் தருவதுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். தருமபுரி தொகுதியில் வெற்றி பெற பாடுபட்ட கூட்டணி கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், வைகோ, ஏ.சி.சண்முகம், ஈஸ்வரன், பாரிவேந்தர் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அன்புமணி ராமதாஸ்.
கூட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவர் கே.பி.கந்தசாமி, பாஜக கோட்டப் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், தேமுதிக மாவட்டச் செயலாளர் மருத்துவர் வி.இளங்கோவன், மதிமுக மாவட்டச் செயலாளர் சம்பத், பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அ.சரவணன், முன்னாள் எம்எல்ஏ இல.வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.