Marandahalli Map
Thursday, October 29, 2009
Six hurt as van hits train
Tragedy: The damaged milk van that rammed into a passenger train at an unmanned level crossing between Palacode and Marandahalli in Dharmapuri on Monday.
DHARMAPURI: Six persons sustained minor injuries when a milk van crashed into a passenger train in an unmanned level crossing in Dharmapuri district on Monday morning.
According to sources, the milk van on its way to Ammanimallapuram hit the Salem-Yashwanthpur passenger train near Vattaganapatti village between Palacode and Marandahalli around 7.45 p.m. The passengers who were sitting on the steps of the bogies sustained minor injuries on their knees and legs. While three persons took treatment as outpatients at the Primary Health Centre,Royakottai, details of other three was not available. Dr. P. Arunagiriraj, Chief Medical Officer f the hospital told The Hindu that the injured Annamalai, Karthick and Bharathi were given first aid and sent home. Top railway authorities rushed to the spot. Driver and owner of the milk van are at large. Railway Protection Force, Dharmapuri has registered a case and investigations are on.
Wednesday, October 21, 2009
பட்டாசு வெடித்து ரகளை: ஒருவர் கைது
பாலக்கோடு:
மாரண்டஹள்ளி அருகே ரோட்டில் பட்டாசு வெடித்து கலாட்டா செய்தவரை போலீஸார் கைது செய்தனர். மாரண்டஅள்ளி அடுத்த எம்.செட்டிஅள்ளியை சேர்ந்தவர் பெரியசாமி. தீபாவளியன்று இரவில் பட்டாசு வாங்கிக் கொண்டு நான்கு ரோடு வழியாக வந்தார். கையில் இருந்த பட்டாசை வெடித்து விடுவதாக ரோட்டில் நின்று கலாட்டா செய்தார். வழி முழுவதும் பட்டாசுகளை கையில் பிடித்து வெடித்தபடி மாரண்டஅள்ளி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்தார். தகவல் அறிந்த எஸ்.ஐ., கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் விழுந்த பசுமாடு பரிதாப சாவு
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு பரிதாபமாக இறந்தது. மாரண்டஹள்ளி கும்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன். இவருக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்துக் கிணற்றில் விழுந்து விட்டது. இது குறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அலுவலர்கள் மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாடு விழும்போது பலத்த அடிபட்டதால் மாடு இறந்தது.
மாணவி தற்கொலை
பாலக்கோடு: மாரண்டஅள்ளி அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஈச்சம்பள்ளத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் சத்யா. அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு மாதவிலக்கு கோளாறு காரணமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுமாம்.
இது போல் நேற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சத்யா பூச்சி மருந்தைக் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மாரண்டஅள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
`````
பணம் வைத்து சீட்டாடிய 7 பேர் அதிரடி கைது
பாலக்கோடு: மாரண்டஹள்ளி, பொம்மிடி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.மாரண்டஅள்ளி எஸ்.ஐ., கிருஷ்ணன் மற்றும் போலீஸார் சி.எம்.புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியின் பின்புறம் மூன்று பேர் சீட்டாடினர். மூன்று பேரையும் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தார். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த செவடப்பன், மாதேஸ்வரன், காந்தி என்பது தெரியவந்தது.* பொம்மிடி பஸ் ஸ்டாண்ட் அருகில் எஸ்.ஐ., வளர்மதி மற்றும் போலீஸார் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சந்தைப்பகுதியில் தமிழரசு, மாது, செல்வம், அன்புமணி ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
Wednesday, July 1, 2009
தர்மபுரி, கிருஷ்ணகிரி வேட்பாளர்களுக்கு புது நெருக்கடி
தர்மபுரி, கிருஷ்ணகிரி வேட்பாளர்களுக்கு புது நெருக்கடி
ஏப்ரல் 21,2009,19:17 IST
தர்மபுரி : தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களை சேலம் ரயில்வே கோட்டத் தில் இணைக்க வேண்டும் எனக் கூறி, தேர்தல் நேரத்தில் ரயில்வே ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு டிசம்பரில் சேலம் ரயில்வே கோட்ட எல்லைகள் குறித்து ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஊட்டி - கோவை வடக்கு ஜங்ஷன் (79 கி.மீ.,) கோவை வடக்கு - ஈரோடு - சேலம் - ஜோலார் பேட்டை (277 கி.மீ.,) இருகூர் - போத்தனூர் - கோவை ஜங்ஷன் (19 கி.மீ.,) போத்தனூர் - கிணத்துகடவு (19 கி.மீ.,) சேலம் - கரூர் (85 கி.மீ.,) கரூர் - திண்டுக்கல் (74 கி.மீ.,) சேலம் - விருத்தாசலம் (135 கி.மீ.,) சேலம் - மேட்டூர் (37 கி.மீ.,) ஈரோடு - திருச்சி (137 கி.மீ.,) ஆகியவை சேலம் கோட்டமாக நிர்ணயம் செய்யப்பட்டது. கர்நாடக மாநிலம் தென்மேற்கு ரயில்வே ஹுப்பள்ளி கோட்டத் துக்கு உட்பட்ட தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ரயில்வே எல்லைகளும் சேலம் கோட்டத்தில் இணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கோட்ட எல்லையில் தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மட்டும் இணைக்கப்பட்டதால், தர்மபுரி மாவட்டத் தில் உள்ள தொப்பூர், தர்மபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக் கோட்டை, ஓசூர் ரயில்வே ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இது குறித்து அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் வேலு மற்றும் தர்மபுரி லோக்சபா தொகுதி பா.ம.க., எம்.பி., செந்தில் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களும் கோட்ட துவக்க விழாவுக்கு முன் எல்லை விரிவுபடுத்தப் படும் எனத் தெரிவித்தனர். சேலம் கோட்டம் 2007 நவ., 1ம் தேதி துவங்கப் பட்டது. ஆனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி ரயில்வே எல்லைகள் இன்று வரை கர்நாடக மாநிலம் தென் மேற்கு ரயில்வே ஹுப் பள்ளி ரயில்வே கோட்டத் துடன் உள்ளது. சேலம் கோட்டம் உதயமான போது, ஹுப்பள்ளி கோட்டத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடமாற்றல் விருப்பத்தின் அடிப்படையில் மாற்றல் வழங்கப் பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ரயில்வே எல்லைகளும் சேலம் கோட்டத் தில் இணைக்கப்படும் என்ற நம்பிக்கையில் பலர் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களுக்கு மாறுதலாகி வந்தனர். ஆனால், ரயில்வே ஊழியர்களின் எதிர்பார்ப்பு இது வரையில் நிறைவேற்றப் படவில்லை.
இது குறித்து, 'சிட்டிங்' எம்.பி., செந்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் உள்ளது. தர்மபுரியில் இருந்து 620 கி.மீ., தூரத்தில் உள்ள ஹுப்பள்ளிக்கு பல்வேறு அலுவல் காரணங்களுக் காக ரயில்வே ஊழியர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு கன்னட மொழி தெரிந்தால் மட்டுமே தங்கள் கோரிக்கையை, அங்குள்ள ஊழியர்களுக்கு புரிய வைக்கும் நிலை உள்ளது. சேலம் கோட்டத்தோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களை இணைக்க வேண்டும் என, ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகக் கூறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே ரயில்வே ஊழியர்கள் ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.
Monday, June 29, 2009
விதிகளை மீறி கட்டியுள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவு
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளில் ஒருங்கிணைந்த கண் வங்கி தொடங்க கோரிக்கை
Tuesday, June 23, 2009
பைக்-லாரி மோதல்: விவசாயி சாவு
16 Jun 2009 10:45:29 AM IST
தருமபுரி, ஜூன் 16:தருமபுரி அருகே பைக்கில் சென்ற விவசாயி லாரி மோதி இறந்தார்.
தருமபுரி அடுத்த காரி மங்கலம், பந்தாரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவக் குமார் (38). திருமண பத்திரிகை வைப்பதற்காக உறவினர் வீட்டிற்கு மனைவியுடன் பைக் கில் செவ்வாய்க்கிழமை சென்றார்.
மாரண்டஹள்ளி அடுத்த கோடியூர் பாலம் அருகே இவர்கள் சென்ற பைக் மீது லாரி மோதியதில் சிவக்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார்.
அவரது மனைவி மாதம்மாள் பலத்த காயங்களுடன் பாலக்கோடு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பாலக்கோடு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Friday, June 5, 2009
பாலக்கோடு அருகே லஞ்சம் வாங்கி கைதான சர்வேயர் சிறையில் அடைப்பு
தர்மபுரி, மே. 22-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த மாரண்டஅள்ளி அருகே உள்ள நடுகுட்டல அள்ளி பகுதியைச்சேர்ந்த சித்தண்ணன் மகன் ராஜா (45) விவசாயி. இவருக்கு சொந்த மாக 13 1/2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தனது மகன்கள் 2 பேருக்கு பிரித்துக் கொடுக்க முடிவு செய்தார். இதற்காக பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ரூ. 160 பணம் கட்டி விண்ணப்பித்தார்.
தாசில்தார் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் சர்வேயராக வேலை பார்க்கும் சிவக்குமார் (54) நிலத்தை அளந்து பிரித்து கொடுக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
முதலில் அட்வான்சாக ரூ. 500 லஞ்சம் கொடுத்த ராஜா மேலும் ரூ. 2500 பணத்தை நிலத்தை அளக்கும்போது தருவதாக கூறினார். பின்னர் இதுகுறித்து தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
துணை சூப்பிரண்டு நாச்சியப்பன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணராஜன், சதீஷ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
சர்வேயர் சிவகுமார் விசாயி நிலத்தை அளந்து விட்டு ரூ2500 லஞ்சம் வாங்கியபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பின்னர் அவரை தர்மபுரி சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அவரை 15 நாள் காவ லில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சர்வேயர் சிவக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாரண்டஹள்ளி அருகே பெண் மர்ம சாவு
மாரண்டஹள்ளி அருகே பெண் மர்ம சாவு
மாரண்டஹள்ளி: வெள்ளி ,ஜூன்,5, 2009
மாரண்டஹள்ளி அருகே பெண் மர்ம சாவு குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். மாரண்டஹள்ளி எருதுகூடப்பட்டி கூட்டு ரோட்டை சேர்ந்தவர் மனோகரன். அவரது மனைவி ரத்னா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு ரத்னா வீட்டில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த மாரண்டஹள்ளி போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரும் அவரை எரித்து கொன்றார்களா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில்
தீர்மானத்தை எதிர்த்து ஆட்சேபனை தெரிவித்ததை தீர்மானத்தில் பதிவு செய்ய கோரி தி.மு.க. அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூராட்சி கூட்டம்
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி
அலுவலகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்
பணிகள் தேர்வு செய்ய அவசர ஆலோசனை கூட்டம்
நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவி ராஜகுமாரி(தி.மு.க)
தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள
முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாரண்டஅள்ளி
பஜார் தெரு, புது வீதி, ஆகிய 2 தெருக்களில் அண்ணா
மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்க
தீர்மானிக்கப்பட்டது.
இதில் புதியதாக சந்தை வீதியிலும் தார்ச்சாலை அமைக்க வேண்டும்
என சில கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவியிடம் வாதாடினர்.
மாரண்டஅள்ளியில் மொத்தம் 15 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில் பேரூராட்சி தலைவி உள்பட 7 கவுன்சிலர்கள் முதலில்
முடிவுசெய்யப்பட்ட தீர்மானத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தார்கள்.
சந்தை வீதியும் சேர்த்து நிறைவேற்றுங்கள் என்று அவர்கள்
கூறினார்கள். இதனை சேர்க்க முடியாது என்று பேரூராட்சி தலைவி
ராஜகுமாரி கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tuesday, June 2, 2009
ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம்
பாலக்கோடு: மாரண்டஅள்ளி அருகே சிக்க மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ராஜி. இவரது மகன் தேவேந்திரன் (48). கெலமங்கலத்தில் வசித்து வருகிறார். சிக்கமாரண்டஅள்ளியில் இருந்து கெலமங்கலத்துக்கு பைக்கில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பினார். எம்.ஜி.ஆர்.நகர் அருகே வந்த போது, எதிரே வந்த ஜீப் மோதியது. இதில், தேவேந்திரன் படுகாயம் அடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சப்பள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Tuesday, May 26, 2009
பாலக்கோடு
57. பாலக்கோடு
பாலக்கோடு: பாலக்கோடு தாலுக்கா(பகுதி) பஞ்சப்பள்ளி' பெரியானூர்' நம்மாண்டஅள்ளி' சின்னேகவுண்டனஅள்ளி' சூடனூர்' கும்மனூர்' ஜிட்டாண்டஅள்ளி' மகேந்திரமங்கலம்' மாரவாடி' திம்மராயனஅள்ளி' முருக்கல்நத்தம்' பிக்கனஅள்ளி' கருக்கனஅள்ளி' வெலகஅள்ளி' ஜக்கசமுத்திரம்' கிட்டனஅள்ளி' சிக்கதோரணபெட்டம்' சாமனூர்' போடிகுட்லப்பள்ளி' அத்திமுட்லு' கெண்டனஅள்ளி' மாரண்டஅள்ளி' சென்னமேனஅள்ளி' சிக்கமாரண்டஅள்ளி' செங்கபசுவந்தலாவ்' பி.செட்டிஅள்ளி' தண்டுகாரணஅள்ளி' அண்ணாமலைஅள்ளி' அனுமந்தாபுரம்' எலுமிச்சனஅள்ளி' முக்குளம்' கும்பாரஅள்ளி' பச்சிகானப்பள்ளி' கெரகோடஅள்ளி' காரிமங்கலம்' பொம்மஅள்ளி' நரியானஅள்ளி' புலிக்கல்' கொண்டசாமஅள்ளி' சிக்கார்தஅள்ளி' ஜெர்த்தலாவ்' கரகதஅள்ளி' பாலக்கோடு' போலபடுத்தஅள்ளி' கொட்டுமாரணஅள்ளி' நாகனம்பட்டி' பெரியாஅள்ளி' அடிலம்' திண்டல்' தெல்லனஅள்ளி' பண்டரஅள்ளி' முருக்கம்பட்டி' இண்டமங்கலம்' மோலப்பனஅள்ளி' பூனாத்தனஅள்ளி' சென்றாயனஅள்ளி' தொன்னேனஅள்ளி' பைகஅள்ளி' கனவேனஅள்ளிநல்லூர்' புதிஅள்ளி' பெலமாரஅள்ளி' திருமால்வாடி' பேவுஅள்ளி' சீரியனஅள்ளி' எராசூட்டஅள்ளி' பொப்பிடி' எருதுகுட்டஅள்ளி' எரனஅள்ளி' சீராண்டபுரம்' குஜ்ஜாரஅள்ளி' உப்பாரஅள்ளி' ரங்கம்பட்டி மற்றும் கிராமங்கள். மாரண்டஅள்ளி(பேரூராட்சி)' கரியமங்கலம்(பேரூராட்சி)மற்றும் பாலக்கோடு (பேரூராட்சி)
அரசு சுகாதார நிலையத்தில் பொங்கல் வார விழா
பாலக்கோடு: மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் வார விழா நடந்தது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் அய்யனார் வழிகாட்டுதலில் மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் சுகாதாரப் பொங்கல் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், மாரண்டஅள்ளி டவுன் பஞ்சாயத்து தலைவர் ராஜகுமாரி மணிவண்ணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவர் டாக்டர் முரளி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் வளர் இளம் பெண்களுக்கான கோலப்போட்டி, வினாடிவினா, கொழு, கொழு குழந்தை போட்டி, கர்ப்பிணி பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல் வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து மேற்பார்வையாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் சுந்தர், கர்ப்பிணிகள் பராமரிப்பு குறித்து சமுதாய சுகாதார செவிலியர் ஹனிசுசீலா ஜெயராமன், வளர் இளம்பெண்கள் சுகாதாரம் குறித்து பகுதி சுகாதார செவிலியர் தங்கமணி ஆகியோர் விளக்கினர்.
தேர்தல் புறக்கணிப்பு தொழிலாளி கைது
மாரண்டஹள்ளி அருகே தேர்தல் புறக்கணிப்பு குறித்த போஸ்டர் ஒட்டிய தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். மாரண்டஹள்ளியை அடுத்த சீரியம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சின்னவன் (45) மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தை சேர்ந்தவர். இவர் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போஸ்டர்கள் ஓட்டினார். வி.ஏ.ஓ., பொன்னியப்பன் மாரண்டஹள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து சென்று சின்னவனை கைது செய்தனர்.
Friday, February 27, 2009
மாரண்டஅள்ளி வங்கி முகவரிகள்
Bank Name: State Bank Of India
Branch Name: MARANDAHALLI
Branch Code: 3834
Address: 313, HIGH SCHOOL ROAD
City: MARANDAHALLI
District: DHARMAPURI
State: Tamil Nadu
Phone: (04348)233328, 0
Fax: 233328
Website: http://www.sbi.co.in/
127
MARANDAHALLI
LAVB0000448
Address : Krishna Complex, High School Road,
MARANDAHALLI, District: Dharmapuri.
State : Tamil nadu
City : Dharmapuri
Pin No. : 636806
Tel : 04348 - 04348-233332
Fax : --
Email : marandahali_bm@lvbank.in ;
மாரண்டஅள்ளி போலீஸ் ஸ்டேஷன்

மாரண்டஅள்ளி போலீஸ் ஸ்டேஷன்
1. ATHIMUTTLU
1. ATHIMUTTLU
2. KAANAR
2. BELAMARANAHALLY
1. AATHUKOTTAI
2. BELAMARANAHALLI
3. BEVUHALLY
1. BEVUHALLY
2. KADAYANAHALLY
3. KARAGUR
4. SEERIYAMPATTY
4. CHANDRAPURAM
1. BELAGAPURAM
2. CHANDRAPURAM
5. CHENGANPASUVANTHALA
1. CHENGAPASUVANTHALA
2. NARAYANAN-KOTTAI
3. SAMIYARKOTTAI
6. CHIKKA MARANDAHALLY
1. CHIKKA MARANDAHALLY
2. C.M.PUDHUR
3. VATTAKONAMPATTY
7. CHIKKATHORANABETTAK
1. THOTTATHORANBETTAM
2. CHIKKATHORANABETTAM
3. CHINNA GUMMANUR
4. CHINNA GUTTALAMPATTY
5. NADUGUTTALAMPATTY
6. ULAGAMPATTY
8. ERUTHUKOODA
1. ERUTHUKOODAPATTY
2. ENDAGIRI
9. GUJJARAHALLY
1. GUJJRAHALLI
10. KENDEYANAHALLY
1. ALAMARAMPATTY
2. CHINNA CHETTIPATTY
3. JANAPPANUR
4. KENDAYANAHALLY
5. KORAVANDANAHALLY
6. SASTHIRAMUTTULU
11. MARANDAHALLY
1. BANNIPATTY
2. GOWNUR
3. KALLAGARAM
4. MARANDAHALLY
5. M.CHETTYHALLY
6. VALAYAKARAPATTY
12. NALLUR
1. CHIKKANAHALLY
2. CHIKKAPAVALLI
3. NALLUR
4. SEMMANAHALLY
5. THOTTAPAVALI
13. POPPIDI
1. MUSTHIGIRIHALLY
2. POPPIDI
14. SAMANUR
1. KURUMBARAKOTTAI
2. RAYAPURAM
3. SAMANUR
4. THOTTABADAGANAHALLY
15. THIRUMALVADI
1. BELLUHALLY
2. BELRAMPATTY
3. KARIKUTTANUR
4. THIRUMALVADI
16. UPPARAHALLY
1. A.MALLAPURAM
2. UPPARAHALLY