Marandahalli Map

Friday, June 1, 2012

சப் - ரிஜிஸ்டர் ஆஃபீஸுக்கு புதிய கட்டிடம்: எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


சப் - ரிஜிஸ்டர் ஆஃபீஸுக்கு புதிய கட்டிடம்: எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
 பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012,03:01 IST


மாரண்டஅள்ளி :
"காரிமங்கலம் மற்றும் மாரண்டஅள்ளி சப் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும்,'' என எம்.எல்.ஏ., அன்பழகன் சட்டசபையில் பேசினார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் சட்டசபையில் பேசியதாவது:
பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து மற்றும் மாரண்டஅள்ளி டவன் பஞ்சாயத்தில் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு இடங்களில் அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இரண்டு அலுவலத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. புதிய கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம் கூறியதாவது: எம்.எல்.ஏ., அன்பழகன் கூறியதை போல ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் பழமையான சப் ரிஜிஸ்டர் அலுவலகத்துக்கு, போதுமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். அந்த இடம் தேர்வு செய்யப்பட்டு துறைக்கு ஒப்படைக்க பட்டிருக்கமானால் முன்னுரிமை அடிப்படையில் தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புதிய கட்டிடம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.

மாரண்டஅள்ளி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2012-05-31 10:08:23

மாரண்டஅள்ளி :
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள ஆத்துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் பொன்னி (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நடராஜனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தயாளன். தயாளனின் வீட்டிற்கு கோவை மாவட் டம் பல்லடத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் சேகர் (38) அடிக்கடி வந்துள் ளார். சேகர் கோவைக்கு பெண் களை தையல் வேலைக்கு அழைத்துச் செல்லும் ஏஜென்ட். அப்போது பொன்னிக்கும் சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி தயாளன் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் சென்ற பொன்னி நீண்டநேரமாகியும் வரவில்லை. உறவினர் மற்றும் தோழி வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தயாளனிடம் கேட்டபோது, பொன்னிக்கும், சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து பொன்னியின் தாய் வேடியம்மாள் மாரண்டஅள்ளி போலீ சில் சேகர் தனது மகளை கடத்திச் சென்றதாக புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாரண்டஅள்ளி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2012-05-31 10:08:23

மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள ஆத்துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் பொன்னி (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நடராஜனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தயாளன். தயாளனின் வீட்டிற்கு கோவை மாவட் டம் பல்லடத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் சேகர் (38) அடிக்கடி வந்துள் ளார். சேகர் கோவைக்கு பெண் களை தையல் வேலைக்கு அழைத்துச் செல்லும் ஏஜென்ட். அப்போது பொன்னிக்கும் சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி தயாளன் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் சென்ற பொன்னி நீண்டநேரமாகியும் வரவில்லை. உறவினர் மற்றும் தோழி வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தயாளனிடம் கேட்டபோது, பொன்னிக்கும், சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து பொன்னியின் தாய் வேடியம்மாள் மாரண்டஅள்ளி போலீ சில் சேகர் தனது மகளை கடத்திச் சென்றதாக புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Thursday, April 19, 2012

ராஜேந்திரன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி....,

இரு பைக் மோதல்அரசு ஊழியர் ராஜேந்திரன் பலி
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2012,00:31 IST
தர்மபுரி: பாலக்கோடு அருகே இரு பைக் மோதியதில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய புள்ளியாளர் பரிதாபமாக இறந்தார்.
மாரண்டஹள்ளி பவுண்ட் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார புள்ளியாளராக பணிபுரிகிறார். இவர் நேற்று மதியம் தன்னுடன் பணிபுரியும் சேகருடன் பாலக்கோட்டிலிருந்து தர்மபுரிக்கு பைக்கில் சென்றார். கடமடை ரயில்வே கேட் அருகே சென்ற போது, எதிரே வந்த பைக் ராஜேந்திரன் பைக் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரன், சேகரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழியில் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். 



Monday, April 16, 2012

அரசு பள்ளி ஆசிரியர் சாவு

அரசு பள்ளி ஆசிரியர் சாவு
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012,06:12 IST

தர்மபுரி: பாலக்கோடு அருகே நெஞ்சுவலியால் அரசு பள்ளி ஆசிரியர் திடீரென்று இறந்தார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் கே.வி.ஆலங்குளத்தை சேர்ந்தவர் அருள்சேமராஜ் (35).
 தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே சொரகுறுக்கை அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
மாரண்டஅள்ளியில் நண்பர் நாகராஜூடன் வீடு எடுத்து தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் மாலை அருள்சேமராஜ் வீட்டில் சாப்பிட்டுகொண்டிருந்தார். அப்போது, திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அவரை அப்பகுதி மக்கள்  மாரண்டஅள்ளி  ஆரம்ப சுகாதார நிலையத்திற் அழைத்து சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகராஜ் மாரண்டஅள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.

Thursday, April 5, 2012

மாரண்டஹ‌ள்ளி




தர்மபுரி அருகே கட்டாய திருமணம் செய்த இளம்பெண் மீண்டும் கடத்தல்: எஸ்.பி.யிடம் புகார்

தர்மபுரி அருகே கட்டாய திருமணம் செய்த இளம்பெண் மீண்டும் கடத்தல்: எஸ்.பி.யிடம் புகார்

கருத்துக்கள்
தர்மபுரி அருகே கட்டாய திருமணம் செய்த இளம்பெண் மீண்டும் கடத்தல்: எஸ்.பி.யிடம் புகார்
தர்மபுரி, பிப். 21-

தர்மபுரியை அடுத்த மாரண்டஅள்ளி அருகே உள்ள செட்டி அள்ளியை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மனைவி பெருமா. இவர் தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் அஞ்சலியை கடந்த 2004-ம் ஆண்டு கோவிந்தசாமி மகன் அர்ச்சுணன் கடத்தி சென்றார். பின்னர் அஞ்சலியை கைகளை கட்டி வைத்து கட்டாய திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே நான் தர்மபுரி முதன்மை அமர்வு நிதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தேன்.

அதன்பிறகு எனது மகளை போலீசார் மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு பல முறை என் வீட்டிற்கு வந்த அர்ச்சுணன் எனது மகளை அழைத்து செல்ல வந்தார். நான் மறுத்த போதெல்லாம் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதற்கிடையே கடந்த 16-ந்தேதி மீண்டும் அர்ச்சுணன் வந்தார். நான் தாலி கட்டிய மனைவி அஞ்சலி அதனால் அவரை என்னிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்றார். அதற்கு நான் எனது மகள் விருப்பம் இல்லாமல் கட்டாய திருமணம் செய்து கொண்டாய், அதனால் உன்னிடம் அனுப்பி வைக்க முடியாது என்று கூறினேன்.

இதனால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி எனது மகள் அதிகாலை காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த அர்ச்சுணன் எனது மகள் அஞ்சலியை கடத்தி சென்றுவிட்டார். எனது மகள் எங்கு இருக்கிறார். அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இது பற்றி மாரண்டஅள்ளி போலீசில் புகார் கொடுக்க சென்றேன். ஆனால் அவர்கள் எனது புகாரை வாங்க மறுத்துவிட்டார்கள். எனது மகளை கண்டு பிடித்து எங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

மேலும் எனது மகளை கடத்தி சென்றதோடு, கொலை மிரட்டல் விடுத்த அர்ச்சுணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. உறுதி அளித்தார். இதே போன்று டி.ஐ.ஜி. க்கும் தனது மகள் காணாதது பற்றி பெருமா, புகார் மனு அனுப்பி உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு அஞ்சலி 10-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார். அப்போது அர்ச்சுணன் கடத்தி சென்றதால் அதன் பிறகு பள்ளி படிப்பை விட்டு வீட்டிலேயே அஞ்சலி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அஞ்சலி கடத்தப்பட்டு உள்ளார்.

விபத்தில் 3 பேர் படுகாயம்

விபத்தில் 3 பேர் படுகாயம்

கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-04-05 09:53:௨௦
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே நடந்த விபத்தில் மாரண்டஅள்ளி வாலிபர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நல்லூரை சேர்ந்தவர் தொட்டியப்பன் மகன் முரளி(25). இவர் அதே ஊரை சேர்ந்த சுதாகர்(27), அருள்மணி(36) ஆகியோருடன் ஈரோட்டில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் யுகாதி பண்டிக்கைகாக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் சூளகிரிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ராயக்கோட்டை தக்காளி மார்க் கெட் அருகே சென்றபோது எதிரே வந்த வேன் மோதுவதுபோல் வந்தது. உடனே, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முரளி திடீர் பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் 3 பேரும் கீழே விழுந்து படுகாய மடைந்தனர். இவர்களுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து ராயக்கோட்டை எஸ்ஐ ஆனந்தன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

மாரண்டஅள்ளி அருகே இன்ஸ்பெக்டர் மனைவி தீக்குளித்து தற்கொலை எஸ்.பி. விசாரணை

மாரண்டஅள்ளி அருகே இன்ஸ்பெக்டர் மனைவி தீக்குளித்து தற்கொலை எஸ்.பி. விசாரணை

பதிவு செய்த நேரம்:2012-03-30 10:18:௧௮

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே இன்ஸ்பெக்டரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் விஸ்வநாதன். சிக்கமாரண்டஅள்ளியில் வசித்தார். இவரது மனைவி கலைச்செல்வி (33). இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
நேற்று காலை கலைச்செல்வி வழக்கம்போல் தனது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டில் தண்ணீர் வரவில்லை. இதனால் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனுக்கும், கலைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், விஸ்வநாதன் பணிக்கு சென்று விட்டார்.
அவர் சென்ற அரை மணி நேரத்தில் வீட்டு கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு கலைச்செல்வி தீ வைத்துக் கொண்டார். ஆண் குழந்தை வீட்டின் வெளியே கதறி அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் விஸ்வநாதனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் வீட்டு க்கு விரைந்து வந்தார். வீட்டு கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்றார். அங்கு கலைச்செல்வி உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை விஸ்வநாதன் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தர்மபுரி மாவட்ட எஸ்.பி அமீத்குமார் சிங், டி.எஸ்.பி. நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கலைச்செல்வியின் சகோதரர் நாமக்கல்லை சேர்ந்த மான்சிங் என்பவர் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது சகோதரி கலைச்செல்விக்கு முன்கோபம் அதிகம். அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுவார். தண்ணீர் வரவில்லை என்பதால் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் தீக்குளித்துள்ளார் என்று கூறியுள்ளார். கலைச்செல்வியின் மரணத்துக்கான காரணம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

மாரண்டஅள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகம்: வியாபாரிகள் ஏமாற்றம்

மாரண்டஅள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகம்: வியாபாரிகள் ஏமாற்றம்


பதிவு செய்த நேரம்:2012-03-26 09:53:47
மாரண்டஅள்ளி: மாரண்டஅள்ளி ஞாயிறு சந்தையில் ஆடு விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது. பொதுமக்கள் போட்டிபோட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதனால் மொத்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் ஞாயிறு தோறும் சந்தை கூடுவது வழக்கம். யுகாதி பண்டிகையான வெள்ளிக்கிழமையன்று தர்மபுரி பகுதியில் பொதுமக்கள் பலர் அசைவத்தை தவிர்த்து வருகின்றனர். இதன்படி நேற்று அசைவ விருந்து படைக்க முடிவெடுத்தனர். இதையொட்டி, நேற்று மாரண்டஅள்ளியில் நடந்த வாரச்சந்தைக்கு படையெடுத்தனர். காலை 6 மணிக்கே ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது. நேற்று பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
பொதுமக்கள் போட்டிபோட்டு ஆடுகளை வாங்கினர். இதனால் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஒரு ஆடு ரூ5 ஆயிரம் முதல் ரூ8 ஆயிரம் வரை விலை போனது. விலையை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். காலை 9 மணிக்குள் அனைத்து ஆடுகளும் விற்றுத் தீர்ந்தன. அதே நேரத்தில், ஆடு களை மொத்த விலையில் வாங்க டெம்போக்களுடன் வந்திருந்த வியாபாரிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். ஆடுகள் அதிக விலைக்கு விற்றதாலும், பொதுமக்கள் குவிந்ததாலும், வியாபாரிகளால் ஆடுகளை வாங்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ரயில்வே ஸ்டேஷனில் மரங்கள் வெட்டி கடத்தல்

ரயில்வே ஸ்டேஷனில் மரங்கள் வெட்டி கடத்தல்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2012,02:28 IST
தர்மபுரி: மாரண்டஹள்ளி ரயில் ஸ்டேஷனில் வளர்கப்பட்டு வந்த 18 கருவேல மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹூப்ளி ரயில்வே கோட்டத்தில் தர்மபுரி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன் உள்ளன. இந்த ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் உயர் ரக மரங்கள் வளர்கப்பட்டு வருகிறது.
அதை ரயில்வே ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷனில் வளர்க்கப்பட்டு வந்த 18 கருவேல மரங்கள் திடீரென வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி ரயில் பாதுகாப்பு படை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் மரங்களை வெட்டி கடத்திய மர்மநபர்களை தேடிவருகின்றனர். மரங்களை ரயில்வே ஊழியர்களே வெட்டி கடத்தியிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் ரயில்வே ஊழியர்களிடம் விசாரிக்கின்றனர்.

மூன்று இடங்களில் திடீர் தீ விபத்து

மூன்று இடங்களில் திடீர் தீ விபத்து
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2012,01:11 IST
பாலக்கோடு: பாலக்கோடு அருகே மூன்று இடங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பாலக்கோடு அடுத்த கல்கோடப்பட்டியை சேர்ந்தவர் சித்ரா. இவரது தென்னந்தோப்பில் அருகே உள்ள முள்வேலியில் நேற்று முன்தினம் மாலை தீ பிடித்தது. தீ மளமளவென தென்னந்தோப்பிலும் பரவியது. கிராம மக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் அங்கு தீயை அணைத்தனர். இதில், தென்னை மரங்கள், விளக்கமாறு முடைவதற்காக வைக்கப்பட்டிருந்த ஓலைகள் நாசமானது.
* விளாம்பட்டி கிராம ஏரியில் உள்ள கருவேல முள் மரங்களில் நேற்று முன்தினம் மாலை தீ பிடித்தது. அந்த தீ அருகில் உள்ள விளை நிலங்களில் பரவும் சூழ்நிலை ஏற்பட்டது. இதகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்ற தீ பரவாமல் தடுத்தனர்.
* மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லுவை சேர்ந்தவர் மாதன் என்பவரது குடிசை வீட்டிலுல் தீ பிடித்தது. இதில், 15,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது

யுகாதி பண்டிகைக்கு ஆடு விற்பனை அமோகம்

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012,05:47 IST
தர்மபுரி: தர்மபுரி, மாவட்டத்தில், யுகாதி பண்டிகையொட்டி ஆடு விற்பனை சூடுபிடித்தது. பொதுமக்கள் போட்டு போட்டு வாங்கிச் சென்றதால், ஒரு ஆடு, 9,000 ரூபாய் வரை விற்பனையானது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது. யுகாதி பண்டிகை கொண்டாட்டமான கடந்த 23ம் தேதி பொதுமக்கள் அசைவ சாப்பாடு தவிர்த்து வீடுகளில் சைவ சாப்பாடு சமைத்து சாப்பிட்டனர். மேலும், வீடுகளில் இனிப்பு பண்டங்கள் செய்து அக்கம், பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர். யுகாதி முடிந்த மூன்றாம் நாளான நேற்று பொதுமக்கள், வீடுகளில் ஆடுகளை வெட்டி சமைத்து உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
இதையொட்டி தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனை கனஜோராக நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. காலை 6 மணி முதலே ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்கள், போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றதால் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஒரு ஆடு, 5,000 முதல் 8,000 ரூபாய் வரை விற்பனையானது.
சந்தை துவங்கி காலை 9 மணிக்குள் அனைத்து ஆடுகளும் விற்று தீர்ந்தது. இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, கெலமங்கம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் மகராஜகடை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் நடந்த சந்தையில் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால், ஒரு ஆடு, 9,000 ரூபாய் வரை விற்பனையானது. இறைச்சி கடைகளிலும் ஆட்டு இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Monday, March 19, 2012

ரூ.96 லட்சம் மோசடி: ஒருவர் கைது

ரூ.96 லட்சம் மோசடி: ஒருவர் கைது


Feb 26, 2012
பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ரூ.96 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், டாக்டர் உள்பட 5 பேரை தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸôர் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுப்படுவது: தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்துக்குள்பட்ட பச்சினம்பட்டியைச் சேர்ந்தவர் உதயசந்திரன் (43). இந் நிலையில், மாரண்டஹள்ளியில் மருத்துவமனை நடத்திவரும் ஹோமியோபதி மருத்துவரான ஜெயசந்திரனுடன் (45) உதயசந்திரனுக்கு பழக்கம் கிடைத்தது. இருவரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் தலா ரூ.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பணத்தைத் திருப்பி தராததால் பெல்ராம்பட்டியைச் சேர்ந்த சலீம் ஷா உள்பட 7 பேர், தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர். இதில், உதயசந்திரனை போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் உதயசந்திரனின் மனைவி பரிமளா, ஜெயசந்திரன், அவரது மனைவி ஜெயஸ்ரீ, தம்பி ஜெயராஜ், மைத்துனர் சோலை ஆகிய 5 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.

விஷம் குடித்து பெண் சாவு: ஆர்டிஓ விசாரணை

விஷம் குடித்து பெண் சாவு: ஆர்டிஓ விசாரணை
First Published : 07 Mar 2012 03:18:02 PM IST
தருமபுரி, மார்ச் 6:
மாரண்டஹள்ளி அருகே உள்ள செட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (30). இவரது மனைவி மணிமேகலை (23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகின்றன. 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மணிமேகலை, விஷம் குடித்து மயங்கிய நிலையில் திங்கள்கிழமை கிடந்தார். வீடு திரும்பிய ராஜா, அவரை மீட்டு மாரண்டஹள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த மருத்துவர்கள், மணிமேகலை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது தந்தை திம்மராயன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகியுள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வெயில் உக்கிரம் அதிகரிப்பால் இளநீர் தட்டுப்பாடு : வெளி மாநில வியாபாரிகள் கொள்முதல்

வெயில் உக்கிரம் அதிகரிப்பால் இளநீர் தட்டுப்பாடு : வெளி மாநில வியாபாரிகள் கொள்முதல்


பதிவு செய்த நாள் :
பிப்ரவரி 29,2012,02:11 IST

தர்மபுரி : கோடைக்கு முன் வெயில் உக்கிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் இளநீருககு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதல் தரமான இளநீர் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்வதால், வரும் நாட்களில் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 0.38 மில்லியன் ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், நெல்லை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
தென்னையை பொறுத்த வரையில் கற்பக விருச்சக மரமாகும். தென்னையில் இளநீர் முதல் மட்டை வரையில் விவசாயிகளுக்கு லாபத்தை கொடுக்கும் என்பதோடு, தென்னை மரங்களில் ஆயுட்காலமும் அதிகம் என்பதால் தென்னை விவசாயிகளுக்கு நஷ்டம் அதிகம் ஏற்படுவதில்லை.
வறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றப்படி தென்னை விவசாயத்தை பொறுத்த வரையில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் சராசரி லாபத்தை கொடுக்கும் பணப்பயிராக தென்னை சாகுபடி இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் கோடை காலங்களில் இளநீருக்கு அதிக அளவில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து அறுவடை அதிகம் நடக்கும். ஆண்டு முழுவதும் இளநீர் விற்பனை இருந்த போதும், கோடை காலங்களில் வெளி மாநில வியாபாரிகள் வருகை அதிகம் இருப்பதால், தர்மபுரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் இளநீரில் 40 சதவீதம் வரையில் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது.
கோடை கால விற்பனையை குறி வைத்து தர்மபுரி மாவட்ட வியாபாரிகளும், வெளி மாநில வியாபாரிகளும், நேரடியாக தென்னை விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதோடு, முதல் தரமான இளநீர் அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் முன் கூட்டியே குத்தகை அடிப்படையில் தோட்டங்களை எடுத்து காய்களை பறித்து விற்பனைக்கு எடுத்து செல்வர்.
இதனால், கோடை காலங்களில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து மாரண்டஹள்ளி, வெள்ளி சந்தை, பாலக்கோடு, அரசம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து அதிக அளவில் தென்னை தோட்டங்களை வியாபாரிகள் குத்தகைக்கு எடுத்து வெளி மாநிலங்களுக்கு குறிப்பாக கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அதிக அளவில் இளநீர் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
உள்ளூர் வியாபாரிகள் சிறு விவசாயிகளிடம் இருந்து முன் பணம் கொடுத்து இளநீர் அறுவடை செய்து விற்பனை செய்கின்றனர். ஃபிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து கோடை வெயில் உக்கிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து இளநீர் விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகம் பனி காற்றின் தாக்கம் இருந்த போதும், இளநீர் 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெயில் உக்கிரத்தை தொடர்ந்து இளநீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை அதிகரிப்பு காரணமாக கடந்த நாட்களில் காலை முதல் மாலை வரையில் இளநீர் வியாபாரிகள் விற்பனை செய்த நிலை மாறி தற்போது, காலை நேரங்களில் மட்டுமே இளநீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இளநீருக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்படும் நிலையிருப்பதால், விலை ஏற்றத்துக்கும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தட்டுப்பாட்டை சமாளிக்க வியாபாரிகள் வீடுகளில் உள்ள தென்னை மரங்களிலும் காய்களை பறிக்க முன் பணம் கொடுத்து விற்பனை தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தர்மபுரியில் 14.7 டன் புளி ஏலம்: நேரடி விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி

தர்மபுரியில் 14.7 டன் புளி ஏலம்: நேரடி விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012,21:00 IST

தர்மபுரி: தர்மபுரி மதிக்கோன்பாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூட்டத்தில் விவசாயிகள் நேரடி விற்பனை புளி ஏலத்தில் 14.7 டன் புளி விற்பனை நடந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மதிக்கோன்பாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்தாண்டு முதல் வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் விவசாயிகள் கொண்டு வரும் புளியை நேரடியாக விற்பனை செய்ய வேளாண் விற்பனை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் இருந்து ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த வாரம் 54 டன் புளி 11 லட்ச ரூபாய்க்கு விற்பனை நடந்தது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தின் போது, தர்மபுரி, தொப்பூர், ஜருகு, நவலை, ஜாலிகொட்டாய், கடத்தூர், அரூர், பென்னாகரம், மாரண்டஹள்ளி மற்றும் தர்மபுரி சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தொட்டு புளி மற்றும் தோசை புளி விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், 3 லட்ச ரூபாய்க்கு 14.7 டன் புளி விற்பனை நடந்தது. தொட்டு புளி அதிக பட்சம் 16 ரூபாய் 75 பைசாவுக்கும், குறைந்த பட்சம் 12 ரூபாய்க்கும், தோசைப்புளி அதிகப்பட்சம் 71 ரூபாய் 50 பைசாவுக்கும், குறைந்தபட்சம் 67 ரூபாய்க்கும் விற்பனை நடந்தது. கொட்டை புளி அதிகபட்சம் 25 ரூபாய்க்கும், குறைந்த பட்சம் 20 ரூபாய்க்கும் விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் புளி விலை கிலோவுக்கு 11 ரூபாய் குறைவாக விற்பனை நடந்தது.

இறந்தவர்கள் கண் தானம்

இறந்தவர்கள் கண் தானம்



பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2012,04:04 IST
தர்மபுரி:
மாரண்டஹள்ளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம்மாள் (80). இவரும் இயற்கை மரணம் அடைந்தார். அவரது கண்களை தானம் செய்ய அவரது மகன் செல்வமணி தர்மபுரி லயன்ஸ் சங்கத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
தர்மபுரி கண் தான மையத்தில் இது வரையில் இறந்த 216 பேர்களிடம் இருந்து கண் தானம் பெறப்பட்டுள்ளது.இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய விரும்புவோர் தர்மபுரி கண் தான மைய டெலிஃபோன் எண் 04342 - 260 696, 264 696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, March 17, 2012

மாரண்ட அ ள்ளியில் அதன் சுற்று வட்டார பகுதியில் நடந்து காஞ்ச கூட்டம் படபிடிப்பு...

விஜயா பிலிம்ஸ் சார்பில் எஸ்.விஜயகுமாரி, டி.கே.குமரன், ஸ்ரீ பாலாஜிபெரியசாமி இணைந்து தயாரிக்கும் புதிய படம் கஞ்சா கூட்டம்.

தீய வழிமுறைகளால் அழிய இருக்கும் ஒரு கிராமத்தை நான்கு இளைஞர்கள் எப்படி காப்பாற்ற போராடுகிறார்கள் என்பதை காதல் மற்றும் நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான திரைக்கதையாக கஞ்சா கூட்டம் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் புதுமுகங்கள் லிங்கா, வினோ, டிக்சன், கமல் மற்றும் ஸ்ரீதேவி, சக்தி இவர்களுடன் குமரன், பாலாஜிபெரியசாமி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் ஆகியவற்றை டி.எஸ்.திவாகர் ஏற்றுள்ளார்.

P.T. ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, என்.பாலு படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். தர்மபுரி, ஒகேனக்கல், கவண்டனூர், மாரண்டஅள்ளி, காரிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.
நன்றி: தினமலர்.காம்

Monday, January 16, 2012

வாலிபர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை

வாலிபர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2012,02:07 IST
பாலக்கோடு: மாரண்டஹள்ளியில் வாலிபர் தூக்கில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது என உறவினர்கள் கூறிய புகாரை தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
மாரண்டஹள்ளி கரகூரை சேர்ந்தவர் விவசாயி முருகன். இவரது மகன் சத்தியமூர்த்தி (23). இவர் டி.எம்.இ., படித்து விட்டு தந்தையுடன் சேர்ந்த விவசாய பணிகளை கவனித்து வந்தார். இவருக்கும் கோட்டூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணின் பெற்றோருக்கு காதல் விவரம் தெரிந்து, கடந்த இரு நாட்களுக்கு முன் சத்தியமூர்த்தியை பெண்ணின் உறவினர்கள் வந்து கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்ற சத்தியமூர்த்தி வீடு திரும்பவில்லை.
சந்தேகம் அடைந்த சத்தியமூர்த்தியின் உறவினர்கள் அவரை தேடிய போது, அந்த பகுதியில் உள்ள மாந்÷õப்பில் சத்தியமூர்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். காதல் தகராறில் சத்தியமூர்த்தியை கொலை செய்து இருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர்.
சத்தியமூர்த்தியின் தந்தை முருகன் மாரண்டஹள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் மர்ம சாவு குறித்து விசாரிக்கின்றனர்.

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012,01:52 IST
பாலக்கோடு: மாரண்டஹள்ளி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.மாரண்டஹள்ளி அருகே ஏரியில் அனுமதியின்றி மணல் வெட்டி கடத்துவதாக ஆர்.ஐ., கோவிந்தராஜிக்கு தகவல் வந்தது. ஆர்.ஐ., கோவிந்தராஜ் தலைமையில் உதவியாளர் முருகன் ஆகியோர் சிக்கமாரண்டஅள்ளி புதூரில் உள்ள செங்கன் பசுவன்தலாவ் ஏரிக்கு சென்றனர்.அங்கு டிராக்டரில் மணல் அள்ளியவர்கள் இவர்களை கண்டதும் தப்பியோடினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மாதுசாமி (30) என்பவருக்கு சொந்தமான டிராக்டர் என தெரியவந்தது. மாதுசாமி மீது வழக்குபதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தாசில்தார் மணி விசாரிக்கிறார்.

குஜ்ஜாரஅள்ளியில் மக்கள் தொடர்பு முகாம்

குஜ்ஜாரஅள்ளியில் மக்கள் தொடர்பு முகாம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2012,02:55 IST
தர்மபுரி : பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளி உள்வட்டம் குஜ்ஜாரஅள்ளியில் இன்று (ஜன.,11) காலை 11 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. கலெக்டர் லில்லி தலைமை வகிக்கிறார். இதில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். குஜ்ஜாரஅள்ளி கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் முகாமில் நேரில் கலந்து கொண்டு, அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மனு கொடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய தீர்வும், நலத்திட்ட உதவிகளை பெறலாம். * அரூர் தாலுகா, அரூர் உள்வட்டம் மேலானூர் கிராமத்தில் இன்று காலை 11 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. டி.ஆர்.ஓ., கணேஷ் தலைமை வகிக்கிறார். அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். மேலானூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மனு கொடுத்து உரிய தீர்வு பெறலாம்.