மேலும் புரட்டாசி மாதம் நீடிப்பால் விலை உயர வாய்ப்புள்ளதால், சைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் தக்காளி விற்பனை சூடுபிடித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி வியாபாரி முருகன் கூறியதாவது:ஆந்திரா, கர்நாடகா, மாரண்டஹள்ளி உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு தக்காளி வரத்தாகிறது.
தினசரி 15 லோடு வரை நேதாஜி பெரிய மார்க்கெட்டுக்கு வரத்தாகிறது. தற்போது, புரட்டாசி மாதம் ஹிந்துக்கள் விரதம் இருந்து, சைவ உணவு மட்டுமே உண்பர். இதனால், 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, 15 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.