Marandahalli Map

Sunday, November 20, 2011

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

தர்மபுரி: பதிவு செய்த நாள் : ஜூன் 28,2011,23:41 IST
மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்ற வக்கீலை தாக்கிய எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம் நீதிமன்றங்களை வாக்கீல்கள் புறக்கணித்தனர். பாலக்கோடு அடுத்த சிக்க மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் ரவிசங்கர் (30). கடந்த 26ம் தேதி இரவு இவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக, நேற்று முன்தினம் மாரண்டஹள்ளி போலீஸில் புகார் கொடுக்க சென்றபோது, ரவிசங்கரை எஸ்.ஐ.,தாக்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி மாவட்ட பார் கவுன்சில் சார்பில் எஸ்.பி., கணேசமூர்த்தியிடம் புகார் அளித்தனர். வக்கீலை தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம் தாலுகாவில் உள்ள 11 உள் நீதிமன்றங்களில் பணிபுரியும் 500 வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்றத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் இன்றும், நாளையும் நீதிமன்ற புறக்கணிக்க வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே

No comments: