Marandahalli Map

Sunday, November 20, 2011

தாய் சாவு: பிணத்தை அடக்கம் செய்வதில் மகன்கள் மோதல்

மாரண்டஹள்ளி: பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010,04:29 IST
மாரண்டஹள்ளி அருகே இறந்த தாயின் பிணத்தை எந்த மதத்தின் அடிப்டையில் இறுதி சடங்கு செய்வது என்பதில் மகன்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. மாரண்டஹள்ளி அடுத்த சிக்கதோரணஅள்ளி பெட்டன் பகுதியை சேர்ந்தவர் ரோஜாவதி (65). இவருக்கு முனிராஜ், தேவன் (40), வேலன் (35) ஆகிய மகன்கள் உள்ளனர். ஹிந்து மதத்தை சேர்ந்த இவர்களில் தேவன் மட்டும் கிறிஸ்துவராக மதம் மாறினார். நேற்றிரவு ரோஜாவதி திடீரென இறந்துவிட்டார். தகவல் அறிந்த மகன்கள் தாயில் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் உடல் அடக்கம் செய்வது குறித்து ஆலோசித்தனர். அப்போது, தேவன் கிறிஸ்தவ முறைப்பாடி இறுதி சடங்கு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு மற்ற சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிக்கதோரணபெட்டன் கிராமத்தில் தேவன் மட்டுமே கிறிஸ்தவர் என்பதால் ஹிந்து முறைப்படி சடங்கு செய்ய வேண்டும் என உறவினர்கள், ஊர்மக்களிடம் கூறினர்.

இந்த தகராறால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தாசில்தார் மணி, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்.ஐ., பிரசன்னமூர்த்தி, வி.ஏ.ஓ., பொல்லியப்பன் ஆகியோர் நேற்று காலை ரோஜாவதி வீட்டுக்கு சென்று தேவனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். "பெரும்பாலான மக்கள் ஹிந்து முறைப்படி சடங்கு செய்ய வேண்டும' என வலியுறுத்தியதால் அதன்படி செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறனர். இதை தேவனும் ஏற்றுக்கொண்டார். அதையடுத்து, ஹிந்து முறைப்படி இறுதி சடங்கு செய்ய ஏற்பாடுகள் நடந்தது.


No comments: