Marandahalli Map

Saturday, June 28, 2014

பெண்ணின் பெயரில் போலியாக முகநூல் கணக்குகள் தொடங்கி, ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபர் கைது

பெண்ணின் பெயரில் போலியாக முகநூல் கணக்குகள் தொடங்கி, ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபர் கைது

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முஹம்மது காலித், ஒரு ஓட்டலில் பணியாற்றிய போது, அங்கு வேலை செய்த இளம்பெண் மீது காதல் வயப்பட்டார். அவரது காதலை அந்த பெண் நிராகரித்ததால் அவரது இமெயில் ஐ.டி.யை அறிந்திருந்த முஹம்மது காலித், அதை வைத்து அந்த பெண்ணின் பெயரில் போலியாக ஃபேஸ்புக்கில் கணக்கை ஆரம்பித்து, அந்த பெண்ணின் புகைப்படத்துடன் ஆபாச செய்திகளையும், படங்களையும் பதிவேற்றம் செய்து, அவரது நணபர்கள் பார்க்கும்படி செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.  போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் 7 போலி ஃபேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து,  முஹம்மது காலித் ஆபாச வேலைகளில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

மாரண்டஹள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி பலி

மாரண்டஹள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி பலி

பதிவு செய்த நேரம்:2013-11-19 10:28:32
மாரண்டஹள்ளி:  தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே பன்னிஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன்(29). நேற்று முன்தினம் இரவு, மாரண்டஹள்ளியில் இருந்து வெள்ளிச்சந்தை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். ஜக்கசமுத்திரம் கூட்ரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத அவர் மீது வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மகேந்திரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொங்கலால் களை கட்டியது மாரண்டஹள்ளி வாரச்சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனை

பொங்கலால் களை கட்டியது மாரண்டஹள்ளி வாரச்சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனை

பதிவு செய்த நேரம்:2014-01-13 10:11:54
மாரண்டஹள்ளி : பொங்கலையொட்டி மாரண்டஹள்ளியில் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை 
நேற்று களை கட்டியது.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டு சந்தை கூடுகிறது. 
இந்த சந்தைக்கு மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 3ஆ யிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. பொங்கல் பண்டிகை காரணமாக கடந்த வாரத்தைவிட ஆடுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
நேற்று, 12 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட செம்மறி ஆடுகள் ரூ6 ஆயிரம் முதல் ரூ7ஆயிரம் வரையும், வெள்ளாடுகள் ரூ7 முதல் ரூ.9 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது. 
இதே போல் பொங்கலுக்கு தேவையான கரும்பு, வெல்லம், மண்பானை, காய்கறிகள் விற்பனையும் அமோகமாக நடந்தது.
சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் அதிக அளவில் சந்தைக்கு வந்து பொருட்கள்
வாங்கிச்சென்றனர்.

மாரண்டஹள்ளி அருகே தொழிலாளி தற்கொலை

மாரண்டஹள்ளி அருகே தொழிலாளி தற்கொலை

பதிவு செய்த நாள்

11ஜூன்
2013 
04:14
பாலக்கோடு: கிட்னி செயல் இழந்த விரக்தியில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மாரண்டஹள்ளியை அடுத்து ஆத்துக்கொட்டாயை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து, 60. கடந்த சில தினங்களுக்கு முன் முத்துவின் உடலில் உள்ள, இரு கிட்னிகளும் செயல் இழந்தன. இதனால், அவதிப்பட்டு வந்த முத்து கடந்த, இரு தினங்களுக்கு முன் விஷம் குடித்தார்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்து நேற்று முன்தினம் இரவு இறந்தார். மாரண்டஹள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
* தர்மபுரியை அடுத்த வெள்ளோலையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கவேல், 45. இவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. விரக்தி அடைந்த தங்கவேல், கடந்த, 7ம் தேதி அவரது வீட்டின் அருகே விஷம் குடித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்தில் வக்கீலை தாக்கிய எஸ்.ஐ. “சஸ்பெண்டு”

மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்தில் வக்கீலை தாக்கிய எஸ்.ஐ. “சஸ்பெண்டு”
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜூலை 05, 5:00 PM IST
தர்மபுரி, ஜூலை. 5-
மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்தில் 
 வக்கீலை தாக்கிய எஸ்.ஐ. “சஸ்பெண்டு”
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை 
சேர்ந்தவர் வக்கீல் ரவிசங்கர். சம்பவத்தன்று இவரது வீட்டில் திருடு போனது.
இதையடுத்து புகார் கொடுக்க மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். 
அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் புகாரை வாங்காமால் காலதாமதம் செய்துள்ளார். இதில் எஸ்.ஐ. கணேசன், வக்கீல் ரவிசங்கரை தாக்கியதாக புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக தர்மபுரியில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கணேசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Saturday, May 31, 2014

மொரப்பூர்- தருமபுரி ரயில் பாதைத் திட்டத்தை மூன்றாண்டுகளில் நிறைவேற்றுவேன்

மொரப்பூர்- தருமபுரி ரயில் பாதைத் திட்டத்தை மூன்றாண்டுகளில் நிறைவேற்றுவேன்

First Published : 29 May 2014 04:06 AM IST
மொரப்பூர்- தருமபுரி இடையிலான ரயில் பாதைத் திட்டத்தை வருகிற மூன்றாண்டுகளில் நிறைவேற்றப் பாடுபடுவேன் என தருமபுரி மக்களவைத் தொகுதி பா.ம.க. உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உறுதி தெரிவித்தார்.
தருமபுரியில் புதன்கிழமை மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு முன்னாள் எம்பி ஆர்.செந்தில் தலைமை வகித்தார்.
இதில், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் பேசியது:
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான சென்னை- தருமபுரியை இணைக்கும் மொரப்பூர்- தருமபுரி இடையிலான ரயில் பாதைத் திட்டத்தை வருகிற மூன்றாண்டுகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு எதிராக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தலில் திமுக வீழ்ச்சியடைந்து விட்டது.
அதேபோல, வருங்காலத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்போது, அதிமுகவும் வீழ்ச்சிடையும்.
தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட என்னை பொது வேட்பாளராக கருதி அனைத்து சமுதாயத்தினரும் வாக்களித்துள்ளனர். அதேபோல, திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் எனக்கு வாக்களித்துள்ளனர். இந்தத் தொகுதி மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் என்னை வெற்றி பெற செய்துள்ளனர். அவர்களது நம்பிக்கையை நிறைவேற்றுவேன்.
மேலும், தருமபுரி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பேன்.
மக்களவைக் கூட்டத் தொடர் நேரம் தவிர, மற்ற நாள்களில் தருமபுரி தொகுதியில் இருப்பேன். இந்தத் தொகுதியை அனைத்து வகையிலும் முன்னேற்ற தொழில்சாலைகள், விவசாயம் சார்ந்த தொழில்சாலைகள் ஆகியவை கொண்டுவர பாடுபடுவேன். மேலும், தும்பலஅள்ளி உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை அளிப்பேன். தருமபுரி மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான நிதியை மாநில அரசிடமிருந்து பெறுவேன். தமிழக அரசு நிதி தர மறுத்தால் தொகுதி மக்களுடன் சேர்ந்து போராடி நிதி பெறுவேன்.
தருமபுரி தொகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மத்திய அரசின் நலத் திட்டங்களை பெற்றுத் தருவதுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். தருமபுரி தொகுதியில் வெற்றி பெற பாடுபட்ட கூட்டணி கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், வைகோ, ஏ.சி.சண்முகம், ஈஸ்வரன், பாரிவேந்தர் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அன்புமணி ராமதாஸ்.
கூட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவர் கே.பி.கந்தசாமி, பாஜக கோட்டப் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், தேமுதிக மாவட்டச் செயலாளர் மருத்துவர் வி.இளங்கோவன், மதிமுக மாவட்டச் செயலாளர் சம்பத், பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அ.சரவணன், முன்னாள் எம்எல்ஏ இல.வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உணவு தானிய உற்பத்தியில் இலக்கை விஞ்ச விவசாயிகளின் பங்கு முக்கியமானது

உணவு தானிய உற்பத்தியில் இலக்கை விஞ்ச விவசாயிகளின் பங்கு முக்கியமானது

First Published : 29 May 2014 04:04 AM IST
தருமபுரி மாவட்டத்தில் உணவு தானிய உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் அதிகளவில் உற்பத்தியை எட்ட உறுதுணையாக இருந்த விவசாயிகளின் பங்கு முக்கியமானது என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் குறிப்பிட்டார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:
தமிழகம் முழுவதிலும் கடந்தாண்டில் 110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்டத்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 3.5 லட்சம் மெட்ரிக் டன்னை விட 4.25 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகளின் கருத்து, ஆலோசனையுடன் தமிழக முதல்வர் பிரத்யேகமாக பல திட்டங்களை வகுத்து கொடுத்தது தான் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
கடந்தாண்டு மாநிலம் முழுவதிலும் 19 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டதில் தருமபுரி மாவட்ட விவசாயிகள் 13 பேருக்கு கிடைத்துள்ளது.
நிகழாண்டில் உணவு உற்பத்தியைப் பெருக்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.சின்னசாமி பேசியது:
கடந்த 3 ஆண்டுகளாக வறட்சி இருந்த நிலையில் தற்போது ஓரளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த காலங்களில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் நடைமுறையில் இருந்த இலவசமாக விளைநிலங்கள் உழவு செய்து தரும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
மழையுடன், சூறைக் காற்றும் வீசியதால் மாவட்டத்தில் மா, மரவள்ளிக்கிழங்கு கடும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக தருமபுரி அருகே சோலைக்கொட்டாய் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு முற்றிலும் சேதமடைந்து விட்டதால் அந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும்.
தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனுக்காக டிராக்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு விரோதியாக வங்கிகள் செயல்படுவதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
தருமபுரி, மொரப்பூர், காரிமங்கலம் ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் தும்பலஅள்ளி அணையில் இருந்து 58 கி.மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வர ரூ.80 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டும் பட்ஜெட்டில் அறிவிக்கை வெளியிடப்படவில்லை. இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியை எட்டும் அளவிற்கு மழை பெய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டும் வறட்சி நிலவுகிறது. எனவே, துல்லியமாக மழை அளவு கணக்கிடப்படுகிறதா என விவசாயி சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:
சராசரியாக 853 மி.மீட்டர் மழை பெய்யும் மாவட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டில் 753 மி.மீட்டரும், கடந்தாண்டு (2013) 800 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளன. மழை அளவைக் குறிக்க 7 இடங்களில் மழை மானியம் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் பெய்யும் மழையை துல்லியமாகக் கணக்கிட கூடுதலாக 10 இடங்களில் மழை மானியம் வைக்க அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், வேளாண்மை இணை இயக்குநர் கே.மோகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆர்.ஆர்.சுசீலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மொரப்பூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்

மொரப்பூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்

First Published : 28 May 2014 04:06 AM IST
மொரப்பூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து மொரப்பூர் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் சென்னகிருஷ்ணன், செயலர் ரகுநாதன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற சென்னை - மங்களூர் விரைவு ரயில் உள்ளிட்ட இரு ரயில்கள் இரு வழித்தடங்களிலும் மொரப்பூர் ரயில் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக நின்று செல்கின்றன.
இந்த நிலையில், மேற்படி ரயில்கள் வருகிற ஜூலை முதல் தேதி முதல் மொரப்பூரில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆலப்புழா-தன்பாத் டாடா நகர் விரைவு ரயிலும் ஜூலை முதல் தேதி முதல் மொரப்பூர் மற்றும் சாமல்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் நலன் கருதி மொரப்பூர், பொம்மிடி, சாமல்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் வழக்கம் போல நின்று செல்ல ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட கோவை பள்ளி மாணவர் சடலம் மீட்பு

ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட கோவை பள்ளி மாணவர் சடலம் மீட்பு

First Published : 31 May 2014 03:51 AM IST
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கோவை கணபதி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரூபன். இவரது மகன் ஐசக் நியூட்டன் (13). இவர் கோவையிலுள்ள ஒரு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். ரூபன் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை சுற்றுலா வந்தார்.
அங்குள்ள பிரதான அருவியில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அருவிப் பகுதியிலுள்ள தடுப்புக் கம்பி அருகே குளித்துக் கொண்டிருந்த ஐசக் நியூட்டன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்த தகவலின் பேரில், போலீஸார், தீயணைப்பு மீட்புப் படையினர், பரிசல் ஓட்டிகள் ஆற்றில் ஐசக் நியூட்டனைத் தேடினர்.
இந்த நிலையில், அருவிப் பகுதியிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள அத்திமரத்துப்பள்ளம் என்ற இடத்தில் ஆற்றில் ஐசக் நியூட்டனின் சடலம் மீட்கப்பட்டது.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சடலத்தை போலீஸார் அனுப்பிவைத்தனர்.
மேலும், இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணர்ச்சி பொங்க விடைபெற்ற ப.சிதம்பரம்

உணர்ச்சி பொங்க விடைபெற்ற ப.சிதம்பரம்

First Published : 15 May 2014 05:50 PM IST
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது அமைச்சக அதிகாரிகளிடம் இருந்து இன்று பிரியாவிடை பெற்றார்
மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் மத்தியில் கடைசியாக உரையாற்றினார். அப்போது நாட்டின் பொருளாதாரம் சந்திக்கும் சவால்களை பட்டியலிட்டு பேசியதாவது:,
 1966ம் ஆண்டு முதல் நான் தினமும் 16 மணிநேரம் வேலை பார்க்கிறேன். இனியும் அவ்வாறே பார்ப்பேன். இதுவரை பார்த்ததைவிட இனி என்னை பொது வாழ்வில் அதிகம் பார்ப்பீர்கள் என்றார்.
இது குறித்து சிதம்பரத்துடன் பல ஆண்டுகளாக பணியாற்ற நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், சிதம்பரம்  எளிதில் உணர்ச்சிவசப்படமாட்டார். ஆனால் அவரால் முடிந்த அளவுக்கு இன்று உணர்ச்சிவசப்பட்டார். இன்று காலை 8.15 மணிக்கு தனது அலுவலகத்திற்கு சென்ற சிதம்பரம் நிலுவையில் இருந்த கோப்புகளில் கையெழுத்திட்டார்,
கடைசி நாளான இன்று மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசினார். மூன்று முறை மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இதுவரை மொத்தம் 9 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். ஆனால் மொராஜி தேசாய் தான் இருப்பதிலேயே அதிகபட்சமாக 10 பட்ஜெட்கள் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வத்தல்மலை விபத்து: ஓட்டுநர் மீது வழக்கு

வத்தல்மலை விபத்து: ஓட்டுநர் மீது வழக்கு

First Published : 31 May 2014 03:53 AM IST
தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக வாகன ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
வத்தல்மலையிலிருந்து புதன்கிழமை தருமபுரிக்கு வந்த தனியார் பேருந்தில் சுமார் 35-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பேருந்தை பொட்லாங்காடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (28) ஓட்டி வந்தார்.
வத்தல்மலை மலைப் பகுதி 5-ஆவது வளைவில் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்திய பொம்மிடி போலீஸார், அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக ஓட்டுநர் ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்தனர்.

ஒகேனக்கல் ஆலாம்பாடி பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறப்பதை தடுக்க 6 மொழிகளில் எச்சரிக்கை பலகை

ஒகேனக்கல் ஆலாம்பாடி பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறப்பதை தடுக்க 6 மொழிகளில் எச்சரிக்கை பலகை

பென்னாகரம்,
ஒகேனக்கல் ஆலாம்பாடி பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறப்பதை தடுக்க 6 மொழிகளில் எச்சரிக்கை தகவல் பலகை வைக்கப் பட்டுள்ளது.
சுற்றுலா தலம்
ஒகேனக்கல் சுற்றுலா தலத் திற்கு பண்டிகை நாட்கள் மற் றும் விடுமுறை நாட்களில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். அவர்கள் காவிரி ஆறு பெருக்கெடுத்து ஓடும் கண் கொள்ளா காட்சியை பார்த் தும், அருவிகளில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்கின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும் பாலானவர்கள் ஆலாம்பாடி பரிசல் துறையில் குளித்து வருகின்றனர். இங்கு ஆழம் நிறைந்த பகுதி என்பதால் ஆழம் தெரியாமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள் தண் ணீரில் அடித்து செல்லப்படுவ தும், நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதும் வழக்கமாக நடை பெற்று வருகிறது. எனவே ஆலாம்பாடி பரிசல் துறை பகுதியில் உயிர் பலி ஏற்படு வதை தடுக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 6 மொழிகளில் விளம்பர தட்டி வைக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட் டது.

எச்சரிக்கை தகவல் பலகை

அதனை தொடர்ந்து ஆலாம் பாடி பரிசல் துறைக்கு செல்லும் பகுதியில் பாறைகள் மிகுந்த பகுதி, வழுக்கும் பாறைகள், கூர்மையான பாறைகள் மிகுந்த பகுதி, உயிர் சேதம் அதிகமாக ஏற்பட்ட பகுதி, மிகுந்த ஆபத்து, குளிக்க தடை, மீறினால் காவல் துறை மூலம் தண்டிக்கப்படுவீர் என இந்தி, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற் றும் தமிழ் ஆகிய 6 மொழிகளில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எச்சரிக்கை தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
நேற்று கோடை விடுமுறை மற்றும் வாரவிடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் இந்த விளம்பர பலகை பார்த்து அந்த பகுதியில் குளிக்காமல் திரும்பி சென்றனர். மேலும் போலீசார் மற்றும் ஊர்க் காவல் படையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகள் குளிக்காத வகை யில் திருப்பி அனுப்பினர்.

 

தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்

தர்மபுரி,
‘தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
நன்றி தெரிவிக்கும் கூட்டம்
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க. தலைமை நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் சாந்தமூர்த்தி, அரசாங்கம், மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கும், இரவு, பகல் பாராமல் அயராது உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல, இந்த தொகுதி மக்களுக்கு கிடைத்த வெற்றி. நாடு முழுவதும் மோடி அலை வீசியது. ஆனால் தமிழகத்தில் பண அலை வீசியது. பண வினியோகத்தையும் மீறி தர்மபுரி தொகுதி மக்கள் பாசத்திற்காக பணத்திற்கு விலை போகாமல் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து சரித்திர சாதனை புரிந்துள்ளனர்.
ரெயில் பாதை
தேர்தலின் போது பொதுமக்களுக்கு நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். மக்களின் பிரச்சினைகளுக்காகவும், தமிழகத்தின் நலன் காக்கவும் என்றும் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தர்மபுரி-மொரப்பூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். இந்த மாவட்டத்தில் இளைஞர்களின் நலன் கருதி வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகளை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி மதுக்கடைகளை படிப்படியாக மூட பாடுபடுவேன்.திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவாகியுள்ள இந்த கூட்டணியால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. இருக்கும் இடம் தெரியாமல் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகள் நாம் நன்றாக உழைத்தால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடித்து நமது கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். 2016-ம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு கொண்டு வருவது தான். தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அலுவலகம் திறக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
திறந்த ஜீப்பில் நன்றி தெரிவித்தார்
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் டாக்டர் இளங்கோவன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சம்பத், பா.ஜ.க. மாவட்ட தலைவர் கந்தசாமி, தொகுதி பொறுப்பாளர் பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் பாடிசெல்வம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நிர்வாகி மாது நன்றி கூறினார்.
இதனைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எம்.பி. பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிக்கிலி ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அவர் இன்று (வியாழக்கிழமை) தர்மபுரி நகரம் மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி கூறுகிறார்.

கார் கவிழ்ந்து பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்

கார் கவிழ்ந்து பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்

 

பாலக்கோடு,
ஒகேனக்கல்லுக்கு காரியத்துக்கு சென்று திரும்பிய போது பாலக்கோடு அருகே கார் கவிழ்ந்து பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கார் கவிழ்ந்து விபத்து
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பொம்மனூரை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் கோவிந்தராஜி(வயது35). கார் டிரைவர். இவர் மல்லுப்பட்டியை சேர்ந்த ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியின் இறுதி காரியத்துக்கு காரில் 10 பேரை அழைத்து கொண்டு ஒகேனக்கல் சென்றார். அங்கு இறுதி காரியம் முடிந்த பின்னர் அனைவரும் மீண்டும் மல்லுப்பட்டி நோக்கி காரில் சென்றனர்.
அப்போது பாலக்கோடு ரெயில்வே கேட்டில் உள்ள வேகத்தடையில் கார் ஏறி இறங்கிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி சென்ற டிரைவர் கோவிந்தராஜ் மற்றும் மல்லுப்பட்டியை சேர்ந்த தனுசு(41), கோவிந்தராஜ்(50), ஓசூரை சேர்ந்த ஜெயதேவ்(16), சாந்தினி(19, பார்வதி(50), கடத்தூரை சேர்ந்த ராஜம்மாள்(45), வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த சுந்தராம்பாள்(60), பாம்பம்மாள்(70), பெங்களூரை சேர்ந்த ஜெயா(48) ஆகிய 10 பேரும் படுகாயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
ரெயில்வே கேட் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அறிந்த பொதுமக்கள் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காயம் அடைந்தவர்களின உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராக்கிங் தொடர்பான விளக்க குறிப்புகள் அடங்கிய சிறு கையேடு வழங்க வேண்டும்

ராக்கிங் தொடர்பான விளக்க குறிப்புகள் அடங்கிய சிறு கையேடு வழங்க வேண்டும்.

 

தர்மபுரி,
மாணவர் சேர்க்கையின்போது ராக்கிங் தொடர்பான விளக்க குறிப்புகள் அடங்கிய சிறு கையேடு வழங்க வேண்டும் என்று அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு கலெக்டர் விவேகானந்தன் அறி வுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாணவ -மாணவிகளை ராக்கிங் செய்வதை தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, உதவி கணக்கு அலுவலர் தண்டபாணி, பாப்பாரப்பட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கருணாகரன் பாப்பிரெட்டிப்பட்டி தனி தாசில்தார் விஜயா மற்றும் 50-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்துக்கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு கல்லூரியிலும் ராக்கிங்கை தடுக்க கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அமைக்கவேண்டும். அனைத்து கல்லூரி வளாகத்திலும் ராக்கிங்கை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு, தண்டனைகள் மற்றும் குழுவினரின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண் தொடர்பான தகவல் பலகை அமைக்கவேண்டும். மாணவர்களின் அடையாள அட்டையின் பின்புறம் ராக்கிங் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண்கள் மற்றும் இமெயில் முகவரி குறிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
சிறு கையேடு
எஸ்எம்எஸ். மூலம் மாணவர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் 8903891077 என்ற எண்ணை பயன்படுத்தலாம். ராக்கிங் குறித்து அனைத்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுடன் கூட்டம் நடத்தவேண்டும். புதிய மாணவ- மாணவிகள் மற்றும் பழைய மாணவ மாணவிகளிடையே ராக்கிங் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும். மாணவர்கள் சேர்க்கையின்போது ராக்கிங் தொடர்பான விளக்க குறிப்புகள் அடங்கிய சிறு கையேடு வழங்கி அதில் நான் தவறு செய்தால் என்னை கல்லூரியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்பதை அறிந்துகொண்டேன் என கையொப்பம் பெறவேண்டும் என்று அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

தர்மபுரியில் வாக்காளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தார்

பதிவு செய்த நாள் : May 30 | 05:45 am
தர்மபுரி.,
 
தர்மபுரி பகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு நன்றி
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தர்மபுரி தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
நேற்று காலை தர்மபுரியை அடுத்துள்ள ஏமகுட்டியூர், சேரிகொட்டாய், ஆவல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மாலை 5 மணி அளவில் தர்மபுரி நகராட்சியில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புதிய தொழிற்சாலைகள்
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெற செய்ததற்கு பொதுமக்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இங்குள்ள இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக விரைவில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும். ஒகேனக்கல் குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல நடவடிக்கை எடுப்பேன். பெண்களின் கோரிக்கையை ஏற்று இன்னும் ஓரிரு வருடங்களில் மதுபான கடைகளை மூட பாடுபடுவேன்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. செந்தில், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, மாவட்ட செயலாளர்கள் அரசாங்கம், சாந்தமூர்த்தி, நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மோட்டார் சைக்கிள் திருடி விற்க முயன்ற 5 பேர் கைது

மே 31
பாலக்கோடு,மாரண்டஅள்ளியில் மோட்டார் சைக்கிள் திருடி விற்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.வாகன தணிக்கைதர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ரெயில்வே கேட் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் வாகன...

Wednesday, April 30, 2014

நில அபகரிப்பு வழக்கில் முதல் முறையாக 2 பேருக்கு சிறைத் தண்டனை விதிப்பு!

நில அபகரிப்பு வழக்கில் முதல் முறையாக 2 பேருக்கு சிறைத் தண்டனை விதிப்பு!
Posted by: Mathi Published: Friday, April 19, 2013, 12:47 [IST]

தர்மபுரி: தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் முதல் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் 2 பேருக்கு 1 ஆண்டு மற்றும் 1 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் ஏராளமான நில அபகரிப்பு வழக்குகள் புற்றீசல் போல் பெருகின. போலீசாரும் வழக்குப் பதிவு செய்து பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டனர். பல வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதேபோன்ற ஒருவழக்குதான் தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்த சைலேந்தர் என்பவர் தொடுத்தது! சைலேந்தரும் அவரது தம்பி சிவக்குமாரும் கொண்டேன் அள்ளி கிராமத்தில் 3 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை கடந்த 2006-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சிவஞானம் என்பவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் பக்கத்து நிலத்துக்காரர்களான ஆனந்தன், அவருடைய சகோதரர் பெருமாள் ஆகியோர் அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு அடிக்கடி மிரட்டி வந்தனர். கடந்த 14.8.2011 அன்று சைலேந்தர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது ஆனந்த், பெருமாள் ஆகியோர் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக சைலேந்தர் தர்மபுரி நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஆனந்த், பெருமாள் ஆகிய 2 பேருக்கும் 2 பிரிவுகளில் ஒரு ஆண்டு மற்றும் ஒரு மாத சிறை தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நடுவர் குணசேகரன் தீர்ப்பு அளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்கில் முதல் முறையாக 2 பேருக்கு தண்டனை கிடைத்திருப்பது தர்மபுரியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/19/tamilnadu-dharmapuri-records-first-conviction-in-land-grabbing-173745.html

கோடை மழை அறிகுறி துவக்கம் மாவட்ட விவசாயிகள் நம்பிக்கை

கோடை மழை அறிகுறி துவக்கம் மாவட்ட விவசாயிகள் நம்பிக்கை

பதிவு செய்த நாள்

16ஏப்
2014 
06:25
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கோடை மழைக்கான அறிகுறி துவங்கி உள்ளதால், சித்திரை பட்டத்தில் பயிர்களை நடவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். மாவட்டத்தில், இறவை பாசனத்தில் நெல், கரும்பு, மஞ்சள், தக்காளி, மரவள்ளி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை பயிர்கள், மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதே போன்று, விவசாயிகள் தென்கிழக்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை மற்றும் கோடை மழையில் சித்திரை பட்டத்திலும், பயிர்களை மானாவாரியாகவும், இறவை பாசனத்திலும் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்தாண்டு, மாவட்டத்தில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மாவட்டத்தில், கடந்த ஃபிப்ரவரி மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம், 20ம் தேதி முதல் வெயிலின் அளவு, 100 டிகிரியை தாண்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
கடந்தாண்டு, ஏப்ரல் மாதம் கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்ததுடன், சித்திரை பட்டத்தில் பயிர்களை சாகுபடி செய்ய உழவு பணிகளை செய்ய முடிந்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்தாண்டை போல் இந்தாண்டும், கடந்த சில தினங்களாக கோடை மழை, வெறும் சாரலோடு மட்டுமே நின்றதால், விவசாயிகளும், மக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த, 6ம் தேதி ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் பகுதியில் கோடை மழை பெய்ததால், அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தர்மபுரியிலும், சில தினத்துக்கு முன் லேசான மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இந்நிலையில், மாரண்ட அள்ளி பகுதிகளில், 33 மில்லி மீட்டர் மழையும், ஒகேனக்கல்லில், 22 மில்லி மீட்டர் மழையும் பெய்தததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சித்திரை பட்டத்தில் பயிர்களை நடவு செய்ய மாவட்டத்தில் கோடை மழை பெய்யும் என விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.

கள்ளகாதல்; கணவரை கொலை செய்த மனைவி

கள்ளகாதல்; கணவரை கொலை செய்த மனைவி

January 9, 2014  11:57 am

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே உள்ள மிஸ்கிரிஅள்ளி 
கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 44). இவரது 
மனைவி லட்சுமி (40). சின்னசாமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு 
பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதை மனைவி கண்டித்தார்.

ஆனால் சின்னசாமி கள்ளத் தொடர்பை கைவிட மறுத்து விட்டார். 
இதனால் கணவன்மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போனது. மனைவியை சின்னசாமி திட்டினார். 
இதனால் மனம் வெறுத்து போன லட்சுமி இன்று அதிகாலை மணிக்கு 
கணவர் தூங்கிக்கொண்டு இருந்த போது அவரது தலையில் கல்லை போட்டு 
விட்டார். இதில் இரத்த வெள்ளத்தில் அவர் பலியானார்.

பின்னர் லட்சுமி மாரண்டஅள்ளி பொலிஸ் நிலையத்துக்கு சென்று க
ணவரை கொன்று விட்டதாக கூறி பொலிஸில் சரண் அடைந்தார்.

அதன் பிறகு பொலிஸார் லட்சுமியின் வீட்டுக்கு சென்று கொலை 
செய்யப்பட்ட சின்னசாமி பிணத்தை கைப்பற்றி அரச வைத்தியசாலைக்கு 
அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமியிடம் 
பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலக்கோடு அருகே பெண்ணை தாக்கிய விவசாயி கைது

பாலக்கோடு அருகே பெண்ணை தாக்கிய விவசாயி கைது

கருந்தலை புழுக்களால் தென்னைகள் பாதிப்பு! தர்மபுரி மாவட்ட விவசாயிகள் கவலை

கருந்தலை புழுக்களால் தென்னைகள் பாதிப்பு! தர்மபுரி மாவட்ட விவசாயிகள் கவலை

பதிவு செய்த நாள்

11ஏப்
2014 
06:20
தர்மபுரி: கருந்தலைப் புழு தாக்குதல் காரணமாக, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். மா, கரும்பு, மஞ்சள், ஆகியவற்றுக்கு, அடுத்த படியாக, மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி உட்பட, 9,700 ஹெக்டேரில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போதிய பருவமழை இல்லாததால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளை, மேலும், கவலை அடைய செய்யும் வகையில், மாவட்டம் முழுவதும் பரவலாக கடந்த, சில மாதங்களாக, தென்னை மரங்களில், கருந்தலைப் புழுக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், தென்னங்கீற்றுகள் பசுமை இழந்து காணப்படுவதுடன், தென்னை மரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அருகில் உள்ள மரங்களுக்கும், கருந்தலைப் புழு தாக்குதல் பரவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:
கருந்தலைப் புழுக்கள் தென்னங்கீற்றுகளில், அடிபாகத்தில், தங்கி, பச்சையத்தை சுரண்டி, கீற்றுக்களின், வளர்ச்சியை பாதிக்கும். கருந்தலைப் புழுத்தாக்குதல், மார்ச் மாதம் முதல் மே மாதம் கோடை காலங்களில், அதிகளவில் இருக்கும். கருந்தலைப் புழுவின் தாய், அந்துப்பூச்சி, சிறியதாகவும், சாம்பல் நிறத்துடன் காணப்படும். இப்பூச்சிகள், தென்னங்கீற்றின் அடிப்பாகத்தில், பச்சையம் சுரண்டப்பட்ட பகுதிக்கு அருகில், முட்டைகளை இடுகின்றன.
சராசரி புழுப்பருவம், 42 நாட்கள் ஆகும். 12 நாட்களில், கூட்டுகுழு பருவத்தில் இருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள், தங்களது இனசேர்க்கையை மேற்கொண்டு, ஒரு புழு தென்னங்கீற்றுகளில், 135 முட்டைகள் வரை இடுகின்றன. தாய் புழுக்கள், 60 நாட்களில் இறந்து விடும். எனவே, அதன் பருவத்துக்கு ஏற்ப கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்த வேண்டும். கருந்தலைப் புழு தாக்கப்பட்ட, கீழ் அடுக்கில் உள்ள தென்னங்கீற்றுக்களை வெட்டி எரித்து விடவேண்டும்.
கருந்தலைப் புழு தாக்குதல் அதிகமாக இருக்கும் போது, ஒரு லிட்டர் தண்ணீரில், இரண்டு மில்லி டைகுளோர்வாஸ் அல்லது, ஐந்து மில்லி மாலத்தியான் மருந்தினை, ஒரு மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். கருந்தலைப் புழுக்கள், மிக அதிகளவில் தாக்கப்பட்ட மரங்களின் நன்கு வளர்ந்த இளஞ்சிவப்பு நிறமுள்ள வேரினை சாய்வாக வெட்டிய பின், துளைகள் இல்லாத பாலிதீன் பையில், 10 மில்லி தண்ணீருடன், 10 மில்லி மானோகுரோடோபாஸ் மருந்தை கலந்து வேரில் கட்டிவிட வேண்டும்.
மேலும், 25 நாட்களுக்கு பின், கருந்தலைப் புழுவின், புழு பருவத்தை கட்டுப்படுத்த, ஒரு மரத்துக்கு பிரகானிட், 20, பெத்லிட், பத்து ஒட்டுண்ணிகளை விடவேண்டும். கூட்டுபுழுவை கட்டுப்படுத்த மரம், ஒன்றுக்கு, 20 என்ற எண்ணிக்கையில், சால்சிட் அல்லது யுலோபிட் ஒட்டுண்ணிகளை விடவேண்டும். 15 நாட்களுக்கு, ஒரு முறை வீதம், ஐந்து அல்லது, ஆறு முறை ஒட்டுண்ணிகளை, தென்னை மரங்களில் விடுவதன் மூலம் கருந்தலைப் புழுக்களை கட்டுபடுத்தலாம்.
தற்போது, மாரண்டஹள்ளி பகுதியில், தென்னையில் கருந்தலைப் புழுக்கள் தாக்கம் அதிகளவில் உள்ளது. அங்கு, அட்மா திட்டத்தின் கீழ், நான்கு லட்ச ரூபாய் மதிப்பில், விவசாயிகளுக்கு, கருந்தலைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.

பொருட்களை திருடிய வாலிபர் அதிரடி கைது

பொருட்களை திருடிய வாலிபர் அதிரடி கைது

பதிவு செய்த நாள்

02ஏப்
2014 
02:45
மாரண்ட ஹள்ளி : தர்மபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளியில், 
தனியார் பள்ளியில் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷன் எதிரே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால், பள்ளியின் சத்துணவு ஊழியர்கள் மட்டுமே பள்ளியில் இருந்தனர். இந்நிலையில், பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, பள்ளியில் இருந்த கட்டுமான பொருட்களை, மர்மநபர் ஒருவர் திருடி கொண்டிருப்பதை, சத்துணவு ஊழியர்கள் கண்டனர்.
இதுகுறித்து, அவர்கள், பள்ளி தாளாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது புகாரின் பேரில், மாரண்டஹள்ளி போலீஸார், விரைந்து சென்று, அந்த மர்நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். 
விசாரணையில், அந்த நபர், எம்.வெட்டுஹள்ளியை சேர்ந்த மாதேஸ்,30 என்பதும், கட்டுமான பொருட்களை திருடி, விற்பனை செய்ய முயற்சித்ததும், தெரியவந்தது. இதனையடுத்து, மாதேஸை, போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தருமபுரி அருகே கிரேன் முறிந்து விழுந்து 2 சிறுவர்கள் சாவு

தருமபுரி அருகே கிரேன் முறிந்து விழுந்து 2 சிறுவர்கள் சாவு


First Published : 17 March 2014 02:49 AM IST
தருமபுரி அருகே கிணறு தூர்வாரும் பணியின்போது கிரேன் முறிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகேயுள்ள வட்டகானம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் வேலு, காளியப்பன். விவசாயிகள். இருவருக்கும் பொதுவான கிணற்றில் சில தினங்களாக கிரேன் உதவியுடன் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சனிக்கிழமை தூர்வாரும் பணி நடைபெற்றபோது, எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது. அப்போது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த வேலு மகன் ஹரிபிரசாத் (8), காளியப்பன் மகன் பார்த்திபன் (10) ஆகியோரையும் இழுத்துக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த ஹரிபிரசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பார்த்திபன் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது வெளியில் யாருக்கும் தெரியாமல் கிணற்றின் அருகே குழிதோண்டி ஹரிபிரசாத் சடலத்தை புதைத்தனர். இத்தகவல் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு மருத்துவர்கள் குழுவினருடன் சென்ற அதிகாரிகள் புதைக்கப்பட்ட ஹரிபிரசாத் சடலத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து மாரண்டஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மல்லாபுரத்தைச் சேர்ந்த கிரேன் உரிமையாளர் ஆறுமுகத்தைத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஹரிபிரசாத் மல்லாபுரம் அரசுப் பள்ளியில் 3ஆம் வகுப்பும், பார்த்திபன் 5ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

கோடை வெயில் துவக்கம்: இளநீர் விற்பனை அமோகம்

கோடை வெயில் துவக்கம்: இளநீர் விற்பனை அமோகம்




பதிவு செய்த நாள்

06ஏப்
2014 

தர்மபுரி: மாவட்டத்தில், கோடை வெயில் கொளுத்த துவங்கியதால், இளநீர் விற்பனை களை கட்டி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்கள் யாவும், பல்வேறு பணிக்காக அழிக்கப்பட்டதால், சில ஆண்டுகளாக மாவட்டத்தில் பருவமழை ஏமாற்றி வருகிறது. மேலும், மாவட்டத்தில் வெயிலின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் துவக்கத்தில், பகல் நேரங்களில் வெயிலின் அளவு அதிகரித்து வந்தது.
மார்ச் மாதத்தில், கடந்த, 20ம் தேதி, 100.4 டிகிரியும், 21ம் தேதி, 100, 22ம் தேதி 100.7, 24ம் தேதி, 100, 25ம் தேதி 100.4, 29ம் தேதி, 101.3, 31ம் தேதி, 102.2 டிகிரியும், ஏப்ரல், 1ம் தேதி 102.2, 2ம் தேதி, 103.1 டிகிரி என வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், சில தினங்களாக பகல் நேரங்களில் வாட்டி வரும் வெயிலில் இருந்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்ள, கோடைக்கு இதம் தரும் வகையில், இயற்கை பானமான இளநீர் கடைகளை பொதுமக்கள் நாடி வருவதால், இளநீர் விற்பனை களை கட்டி உள்ளது.
இதுகுறித்து, இளநீர் வியாபாரி கிருஷ்ணராஜ் கூறியதாவது:
தர்மபுரியில், கோடை காலங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை, கடந்த காலங்களில் அதிகளவு பருகி வந்தனர்.
அவற்றில், பூச்சி மருந்து கலப்பதாக எழுந்த புகாரால், இயற்கை பானமான இளநீரை இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக வாங்கி பருகி வருகின்றனர். குறிப்பாக, சில தினங்களாக, தர்மபுரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி ஆகிய பகுதிகளில் இளநீரை மொத்தமாக வாங்கி வந்து, தர்மபுரி பகுதியில், ஒரு இளநீர், 15 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.
போதிய மழையில்லாததால், இளநீர் கொள்முதல் விலை, கடந்தாண்டை விட தற்போது உயர்ந்துள்ளது. இதனால் எங்களுக்கு குறைந்தளவு லாபம் மட்டும் கிடைக்கிறது. மேலும், கோடை காலங்களில் இளநீர் விற்பனை அதிகரிக்கும் போது, எங்களுக்கு வருமானம் சற்று அதிகரிக்கும், என்றார்.